
ZERO POLITICS on Instagram: "பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்தார். அண்ணாவின் மறைவால் தவித்த தமிழகத்தை வழிநடத்தும் பொறுப்பு, 1969-ல் கலைஞரின் தோள்களில் ஏறியது. தனது 45-வது வயதில், தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். 1989-ல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கி, சுயமரியாதையை காத்தார், 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம்', உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என, பெண்களுக்கு பல முற்போக்கான திட்டங்களை தந்துள்ளார். விவசாயிகளின் துயரம் துடைக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு 'இலவச மின்சாரம்' வழங்கியவர் கலைஞர். சாதிகளால் பிளவுபட்டிருந்த சமூகத்தை ஒன்றிணைக்க, பெரியார் பெயரில் 'சமத்துவபுரங்களை' உருவாக்கி, எல்லாச் சாதியினரும் ஒரே கூரையின் கீழ் வாழும் சமூக நீதியைச் சாதித்துக் காட்டினார். அவர் போட்ட ஒவ்வொரு கையெழுத்தும், தமிழர்களின் வாழ்வை தலை நிமிரச்செய்துள்ளது. #dailymotivation #dailyinspiration #tamilc"

