"அவள் கேட்காத கேள்வி"
திருமணம் ஆகி 11 வருடங்கள்.
வீட்டில் சண்டை இல்லை.
கணவர் கெட்டவர் இல்லை.
பணம் குறை இல்லை.
பிள்ளைகளும் இருந்தார்கள்.
எல்லோரின் கண்களிலும்...
அது ஒரு சந்தோஷமான குடும்பம்.
ஆனால்...
ஒவ்வொரு இரவும் படுக்கையில் படுத்தபோது,
அவளுக்கு மட்டும் ஒரு வெறுமை.
அருகில் கணவர் இருந்தார்.
ஆனால் அவளைத் தொடாத தூரத்தில்.
முதல் சில மாதங்கள்...
"வேலைப் பளு இருக்கும்."
என்று நினைத்தாள்.
பிறகு...
"சரி, காலம் மாறும்."
என்று காத்திருந்தாள்.
வருடங்கள் கடந்தன.
காத்திருப்பு மட்டும் முடியவில்லை.
ஒரு பெண்ணுக்கு
உணவு கிடைக்கவில்லை என்றால் பசி.
தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தாகம்.
ஆனால்...
தன் கணவனின் நேசமும் நெருக்கமும் கிடைக்கவில்லை என்றால்...
அதற்கு என்ன பெயர்?
அவள் அதை யாரிடமும் சொல்லவில்லை.
ஏனெனில்...
உலகம் பெண்ணின் கண்ணீரை புரிந்துகொள்ளும்.
ஆனால்...
பெண்ணின் உடல் ஏக்கத்தை புரிந்துகொள்ளாது.
இரவு நேரங்களில்
அவள் அழுதது ஆசைக்காக அல்ல.
அவள் அழுதது ஆசைக்காக அல்ல...
தன் உடலுக்கும் பசி இருக்கும் என்பதை,
தன்னுடன் ஒரே படுக்கையில் உறங்கும் கணவனே புரிந்து கொள்ளாததை நினைத்து.
"நான் இனி விரும்பப்படாதவளா?"
என்ற கேள்விக்காக.
கண்ணாடி முன் நிற்கும்போது...
தன்னைத் தானே பார்த்துக்கொள்வாள்.
வயது ஆகிவிட்டதா?
அழகு குறைந்துவிட்டதா?
என்னிடம் என்ன குறை?
என்று நூறு கேள்விகள்.
கணவர் அறியவில்லை.
அவள் உடைந்து கொண்டிருப்பதை.
ஏனெனில்...
அவள் சிரிப்பதை மட்டும் பார்த்தார்.
அந்த சிரிப்பின் பின்னால் இருந்த தனிமையை பார்க்கவில்லை.
ஒருநாள்...
அவள் டைரியில் ஒரு வரி எழுதினாள்.
"எனக்கு உடல் பசி இல்லை...
என்னை இன்னும் விரும்பும் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வுக்குத்தான் பசி."
கடைசி வரி
"ஒரு பெண்ணின் உடல் தேவையை மறுப்பது சில நேரங்களில் அவளின் உடலை அல்ல... அவளின் பெண்மையையே நிராகரிப்பது போல அவளுக்கு உணர வைக்கிறது."
சில காயங்கள் உடலில் தெரியாது.
அவை தினமும் மனதில் இரத்தம் சிந்தும்.
#😊Positive Stories📰 #💪ஊக்குவிக்கும் கதைகள் #👏Inspirational videos #👉வாழ்க்கை பாடங்கள் #📺வைரல் தகவல்🤩


