ShareChat
click to see wallet page
search
அண்ணாமலையிடம் சரண்டரான வேலுமணி.. கோவையில் சரியும் அதிமுக செல்வாக்கு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 1 நாளே உள்ளது. நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் வருகையால் கோவை களம் அதிகளவு கவனம் ஈர்த்துள்ளது. திமுகவுக்கும், செந்தில் பாலாஜிக்கும் அதிமுக வலுவான போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலுமணி அண்ணாமலையிடம் சரண்டராகியுள்ளதால் கோவையில் அதிமுக செல்வாக்கு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக இந்தமுறை செந்தில் பாலாஜியை களமிறக்கியுள்ளனர். கோவை அரசியல் இதனால் கோவை தெற்கு தொகுதியை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜியின் வருகை கோவை மாவட்டம் முழுவதும் திமுகவுக்கு பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை அதிமுக வலுவாக உள்ள பகுதி. அதனால் திமுக - அதிமுக இடையே கோவையில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் கோவையில் அதிமுக நிலை மிகவும் மந்தமாக உள்ளது. திமுக பிரச்சாரம், பணம் என்று எல்லாவற்றிலும் இறங்கியடித்து கொண்டிருக்கிறது. தொண்டாமுத்தூர் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக ரூ.1,500, 2,000, 2,500, 5,000 என்று பணம் பட்டுவாடா செய்கிறது. அதிமுக அனைத்து தொகுதிகளிலும் ரூ.1,000 பட்டுவாடா செய்கிறது. அதிமுக குமுறல் பொதுவாக பூத் கமிட்டியில் அதிமுகவுக்கான கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கும். தேர்தல் பணிகளில் திமுகவை விட அதிமுக முன்னிலை வகிக்கும். இந்தமுறை நிலைமை தலைகீழாக உள்ளது. பல பகுதிகளில் பூத் கமிட்டிக்கான பணம் கூட சரியாக வந்து சேரவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் குமுறி கொண்டிருக்கிறார்கள். வேலுமணி அவரின் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார். கோவை எங்களின் கோட்டை என்று கூறி வந்த வேலுமணி பாஜக அண்ணாமலையை நம்பித்தான் இந்த தேர்தலை சந்திக்கிறார். வேலுமணி உள்ளிட்ட அனைத்து அதிமுக வேட்பாளர்களும் அண்ணாமலையை பிரச்சாரத்திற்கு அழைத்துள்ளனர். அண்ணாமலையிடம் வேலுமணி சரண்டர் கோவையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் அண்ணாமலை 2 முறை பிரச்சாரம் செய்துள்ளார். அனைத்து அதிமுக வேட்பாளர்களின் வாகனங்கள், துண்டு பிரசுரங்களில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், இரட்டை இலை சின்னம் என பல அம்சங்கள் இருந்தும் அதிமுகவினர் அண்ணாமலையை தான் நம்பியுள்ளனர். செந்தில் பாலாஜி கோவை வருகை, விஜய் அரசியல் ஆகியவற்றால் வேலுமணி மிகுந்த பதற்றமடைந்துள்ளார். அவரின் செயல்பாடு அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக அழிந்துவிடும் என்று அண்ணாமலை கூறினார். அதே அண்ணாமலையை நம்பி அதிமுக தேர்தலை சந்நதிப்பது கோவையில் அவர்களின் செல்வாக்கால் ஏற்பட்டுள்ள சரிவை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். #🔶பாஜக #✌️அ.தி.மு.க #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் # https://www.facebook.com/share/p/1ajuKFSC3S/
🔶பாஜக - ShareChat
Facebook