யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனம்
கணவனும் மனைவியும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமலே வாழ்கின்றனர். இதனால் மன அழுத்தம் அதிகமாகி உடல் நலப் பாதிப்புகள் அதிகரிக்கிறது. கணவன் மனைவிக்குள் என்ன? ஈகோ வேண்டிக்கிடக்கு. இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள். நீயா? நானா ?என்று இல்லாமல் நீயும் நானும் என்று வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை இனிமையாகும் .ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுங்கள். இருவரும் சேர்ந்து எதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.கோயில்களுக்கோ உல்லாசப் பயணமோ குடும்பத்தோடு சேர்ந்து செல்லுங்கள்.அப்பொழுதுதான் குடும்பத்திற்குள் ஒரு பிணைப்பு, ஒற்றுமை , புரிதல் ஏற்படும்.உங்கள் சந்தோசமே உங்கள் குடும்பம் தான். வீட்டிற்கு வெளியே சந்தோசத்தைத் தேடாதீர்கள்.
#🚹உளவியல் சிந்தனை #💑கணவன் மனைவி காதல்💞 #🤗குடும்ப பாசம் #💑கணவன் - மனைவி #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️


