ShareChat
click to see wallet page
search
இன்றைய மருந்து தயாரிப்பு *#திரிபலா சூரணம் தயாரிப்பு* *#இரத்தசர்க்கரை* அளவை சீராக்கவும், இது இயற்கையாக பசியைத் தூண்டும் ஒரு பொருள். செரிமானத்தை ஊக்குவித்து, *#அசிடிட்டியை* குணப்படுத்தி வயிற்று புண்ணுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க உதவுகிறது. *#கொலஸ்ட்ரால்* அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் வாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. கண்களுக்கும் சருமத்திற்கும் சிறந்த நன்மையை வழங்குகிறது. திரிபலாவைக் கொண்டு கண்களைக் கழுவுவதால், *#கண்புரை*, *#கிட்டப்பார்வை*, *#இமைப்படல அழற்சி* போன்றவை குணமாகிறது. இரத்தத்தின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் அன்டி ஆக்சிடென்ட் தன்மை, சருமத்தில் வயது முதிர்விற்கான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. உடலின் திசுக்களில் அதிகப்படியான தண்ணீர் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் பசி கட்டுப்படுகிறது. திரிபலா ஆறு சுவைகளையும் கொண்ட அற்புதமான மருந்து. ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம். மேலும், 1. இரைப்பை பலவீனத்தை சரிசெய்து, உணவிலிருந்து சுத்தமான அன்னரசத்தை பிரிக்க உதவுகிறது. (EXTRACTS) 2. இரத்தத்தை தேவையான அளவு உற்பத்தி செய்யவும், இரத்தக் கழிவுகளை வெளியேற்றவும், ரத்தத்தில் கலந்த பித்தத்தையும் வெளியேற்றிட உதவுகிறது. 3. இதன் துவர்ப்புத் தன்மையால் அதிஉஷ்ணம் தணிந்து *#உள்ரணம்* ஆற்றப்படுகிறது. 4. நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு மண்டலம் அனைத்தையுமே சீர்ப்படுத்துகிறது. மொத்தத்தில் உடம்பைப் பேணிப் பாதுகாக்கும் தன்மை திரிபலாவிற்கு உண்டு. திரிபலா சேர்க்காத சித்த மருந்தே இல்லை எனலாம். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உடல் தேய்வினைத் தடுக்கவும் திரிபலா ஒரு நன்மருந்து. இதை *#காயகல்பம்* என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்றும் சொல்லலாம். உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது சாதாரண கிருமி தொற்று முதல் *#புற்றுநோய்* செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்புசக்தியை தருகிறது. உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் அளவுக்கு உடலுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டி பயாடிக் என்றும் இதை சொல்லலாம். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495 #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - . 7٧ 57  ]"0` 0=! . 7٧ 57  ]"0` 0=! - ShareChat