#🏋🏼♂️ஆரோக்கியம் திடீர் மாரடைப்புகளால் உயிரிழப்போர் விகிதம் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற நேரத்தில், மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன என தெரிந்துகொள்வது அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள நமக்கு உதவும். அப்படியான பொதுவான சில அறிகுறிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...
.
1) நடக்கும் போது நெஞ்சு வலி ஏற்படுவது, ஒருநாளில் அடிக்கடி / அதிகமாக புளித்த ஏப்பம் ஏற்படுவது, படுத்திருக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உஷாராக இருங்கள்.
2) மார்பில் அசௌகரியம்: நெஞ்சில் திடீர் வலி, அசௌகரியம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதிலும் இரவில் மார்பு வலி அதிகமாக இருக்கும். அது தோள்பட்டை, கை, கழுத்து, தாடை, முதுகு என உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும்.
.
3) வழக்கத்துக்கு மாறாக குறைவாக நடப்பதும் முக்கிய அறிகுறி. இது, இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்துகிறது.
.
4) திடீர் தலைச்சுற்றல்: இது கரோனரி தமனி (coronary artery) அடைப்பு பிரச்சனையின் மற்றொரு அறிகுறியாகும். தலைச்சுற்றலுடன் மங்கலான பார்வை மற்றும் பார்வைத் தெளிவின்மை ஆகியவை ஏற்படலாம். மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் போது தலைச்சுற்றலும் ஏற்படலாம். சில நேரங்களில் குமட்டல், வாந்தியும் வரலாம்.
5) மூச்சுத் திணறல்: இதயத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது உடலைப் பாதிக்கும். குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இது இதய அடைப்பு பிரச்சனையின் அறிகுறியாகும். இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது.
6) சோர்வு: சில சமயங்களில் Heart blocks சோர்வை ஏற்படுத்தும். எந்த ஒரு சிறிய வேலையும் உங்களை விரைவாக சோர்வடையச் செய்யும். உடல் ஆற்றலை இழக்கும். இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறைந்தால், அதன் தசைகளுக்கு ஆக்ஸிஜன் செல்லாது. இதனால் சோர்வு ஏற்படுகிறது.
7) அதிக வியர்வை: தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது, இதயத்தில் அழுத்தம் அதிகரிப்பதால் வியர்ப்பது இயல்பானது. இது தீவிரமானதாக இருந்தால், மருத்துவரை அணுகவும். உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் வியர்வை ஏற்படலாம். இது மார்பு வலி அல்லது பிற அறிகுறிகளுடன் தொடர்புடையது.
8) இவையன்றி அரிதான சந்தர்ப்பங்களில், கரோனரி தமனி அடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்பு, கைகள், கழுத்து, தாடை போன்ற உடலின் மற்ற பகுதிகளிலும் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கலாம்.
இதுபோன்ற அறிகுறிகள் தெரியவந்தால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், இதுபோன்ற அறிகுறிகளை உதாசீனப்படுத்தக்கூடாது.
அனைத்து வயதினருமே ஆண்டுக்கொருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்


