ShareChat
click to see wallet page
search
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் சித்ரா பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்,(26.04.2026) அன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் 2026 ஆம் ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ர பௌர்ணமி ஒவ்வொறு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி வருகின்ற 30.04.2026 மற்றும் 01.05.2026 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து திருக்கோயிலை தரிசிக்கவும், கிரிவலம் வருவதற்கும் வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான ஆன்மிக பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போக்குவரத்து போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திருவண்ணாமலையில் ஈசான்ய மைதானம் மற்றும் அவலூர்பேட்டை சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிவறை, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி பக்தர்களுக்கு எவ்வித சிரமமின்றி செய்து சித்ரா பௌர்ணமி விழா நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். முன்னதாக தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பணை கூடம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வம், போக்குவரத்து துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat