நட்புகளே!
என் உயிர் சொந்தங்களே!
சமூக அவலங்கள்..
சர்ச்சைக்குரிய பேச்சுகள்..
சளைக்காத கொலைகள்..
முக்கிய துறைகளிலேயே முக்கலும் முனகலும்..
கொடூரமும்.. கொலைகளும்..
வாய் ஓயாத பொய்கள்..
புரட்டுகள்..
அவிழ்த்துவிடும் அறிக்கைகள்..
பெண் கொடுமை .. வன்கொடுமை..
வரதட்சணை கொடுமை..
கூட்டணி குழப்பங்கள்..
கூத்தாடும் குறைகுடங்கள்..
பந்தாடப்படும் நேர்மையாளர்கள்..
நல்லவர் யார் ..
கெட்டவர் யார்..
புரியாத மக்கள்..
என் தமிழகம் தாங்குமா ..
இத்தனை பாரத்தில்..
நம் தாயகம் வாழுமா..
நம் தமிழ் மக்கள் வாழ்வை கருத்தில் கொள்வோர் யாரையா..
நாலும் நடக்குது.. நாலா பக்கமும் நாட்டுக்கு நெருக்கடி..
நல்லது செய்வாங்களா..
நம்பலாமா யாரையும்..
நம்பி வாக்களிக்கலாமா..
தமிழகம் தளைக்குமா??
தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழ வழி உண்டா..
தலைவர்களே தலைவணங்கி கேட்கிறோம்..
மக்கள் நன்மையை மட்டுமே கருத்தில் வைங்க..
சொன்னதை செய்ங்க..
செய்வதை மட்டும் சொல்லுங்க..
கங்கனம் கட்டும் சவடால்கள் விட்டொழித்து..
கரிசனம் காட்டுங்க..
மக்கள் மேல்...
புரட்சிகள் வெடித்தால்தான் தமிழகத்தில் விடியும் என்றால்..
புறப்படுங்கள்..
இந்தப் புனித மண்ணில்..
புன்னகைகள் மின்னட்டும்..
பொன்னான நம் மக்களின் முகங்களில்..
தமிழ் வாழ்க!!
தமிழக மக்கள் வாழ்க!!
By,
என் தமிழ் மண்ணை உயிராய் போற்றும் பாவப்பட்ட ஒரு தமிழச்சி....
Eva. Geetha.
https://www.facebook.com/share/p/1JGkzxYTaP/ #தெரிந்துகொள்வோம் #
Facebook

