மீண்டும் மீண்டும் சொல்கிறோம்..!
இன்று உள்ள சவால் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது இல்லை.. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான்..!
இங்கு விஜயை நேசிக்கும் சகோதரர்களுக்கு நாம் வைக்கின்ற கோரிக்கை ஒன்றுதான்..
பாஜக ஆட்சியின் அவலங்களை தனது தேர்தல் பிரச்சாரத்தில் எங்காவது உங்கள் தளபதி எடுத்துரைத்துள்ளாரா ..?
இன்றளவும் அவர் சார்ந்த கிறித்தவ சமுதாயத்தை நசுக்கிக்கொண்டிருக்கும் சங் பரிவாரைக் கண்டித்துள்ளாரா ...?
மாட்டிறைச்சியின் பெயரால் அன்றாடம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளாரா..?
எவ்வளவு அக்கிரமங்களை பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல் அன்றாடம் செய்து வருகிறதே... அதை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியுள்ளாரா..?
இவ்வளவு ஏன்..? தன் படத்தை வெளியிடாமல் சென்சார் போர்டு மூலம் சதி செய்த பாஜகவை ஒருவார்த்தை கூட பேசவில்லையே.. ஏன்..?
இதையெல்லாம் நாம் சொன்னால், இது மாநில தேர்தல்.. இங்கே எதுக்கு பாஜகவைப் பற்றி பேச வேண்டும் என்று தளபதி சப்பைக்கட்டு கட்டுகிறார்.
சரி... அவருடைய பாயிண்டுக்கே போவோம்.. இப்போ திமுகவை வீழ்த்தி விட்டால், இங்கு அடுத்து யார் ஆட்சி அமகப்பார்கள்..? அதிமுக என்ற பேனரில் பாஜக ஆளும். பீஹாரில் நிதீஷ் குமாரை பொம்மையாக வைத்து ஆள்வது போல், கர்நாடகாவில் தேவகவுடா மகனை வைத்து ஆண்டது போல், இங்கு எடப்பாடி என்ற பொம்மையை வைத்து ஆள்வார்கள்.
சரி... பாஜக நிழல் அரசு நடந்தால் என்ன ஆகும்..?
வடமாநிலங்களில் கண் முன்னால் பார்க்கிறோம் என்ன நடக்கிறது என்று...??
இல்லை.. எங்கள் தளபதி தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைப்பார் என்று நீங்கள் நம்பலாம். அது உங்கள் நம்பிக்கை. ஆனால், யதார்த்த நிலவரத்தில் அதற்கு இடமில்லை..!
சரி.. ஒரு வேளை விஜய் முதல்வரானால் என்ன நடக்கும்..?
தன் ஆட்சியைக் காப்பாற்ற நினைப்பாரா..? அல்லது சிறுபான்மையினரைக் காப்பாற்ற நினைப்பாரா..?
அரசியல் என்பது மூன்று மணி நேரம் ஓடும் சினிமா அல்ல.
ஆனானப்பட்ட கலைஞரையே வந்து பாரு என்று சூழ்ச்சி செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் கும்பல்..!
உங்க தளபதி நிலைமை..? இப்போவே பாஜக பேரைக் கூட சொல்லத் தயங்கும் தளபதி நாளை பாஜகவை எதிர்த்து ஒரு மாநிலத்தைக் கொண்டு சென்று விடுவாரா..?
தவெக வின் எம்எல்ஏ வேட்பாளர்களில் எத்துனை பேருக்கு பாசிசத்தைக் குறித்து தெளிவாக தெரியும்..?
தடுக்கி விழுந்ததற்கு எல்லாம் திமுக சதி.. திமுக சதி னு ஒப்பாரி வைச்சு தன் ரசிகர்கள் மண்டைல ஆழமாக திமுக எதிர்ப்பை விதைத்து வைத்திருக்கும் அளவுக்கு, பாசிசத்தைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொடுத்திருப்பாரா தளபதி..?
இப்போதும் சொல்கிறோம்.. தளபதிக்கு என்று நல்ல மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அதை பாசிசத்திற்கு எதிராக, மதவெறிக்கு எதிராக.. சமூக நீதி படித்த இளைஞர் பட்டாளமாக உருவாக்கினால்...
இறையருளால் தமிழகம் தளபதிக்கு காத்துக் கிடக்கும்.. அதில் ஒரு பயனும் இருக்கும்.. அப்போது அவருக்கு செலுத்தும் வாக்கிற்கு ஒரு அர்த்தமும் இருக்கும்..!
சிந்தியுங்கள்.. இளைய தலைமுறையே..!
#💪தி.மு.க #😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

