https://youtube.com/watch?v=GyQuRsZ9FZ0&si=rz5pF3jbrcIzy2TU 🕉️✡️ சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை 2026 பற்றிய விளக்கம். ✡️🕉️
பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை
இந்த வீடியோ பதிவானது சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை அன்றைய தினத்தில் நாம் அனைவரும் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம்.
ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து இந்நன்னாளில் அதன் ப்ரகாரம் கடைபிடித்து கொண்டு வேதம் படித்த வேத ஸாஸ்த்திரம் தெரிந்த ப்ராஹ்மணரை ஸ்ரீ சித்ரகுப்தராக வரித்து நினைத்து கொண்டு அவர்களுடைய பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் தாங்களுக்கும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சித்ரகுப்தன் சித்திரை மாதம் பௌர்ணமி நன்நாளில் அவதாரம் எடுத்தவர். இவர் ஸ்ரீ ப்ருஹ்மாவின் புதல்வர் ப்ராஹ்மணர் ஆவார். முக்கியமாக நவக்கிரஹ கோள்களில் கேது க்ரஹமும் இவர் தான். ஆகவே தான் கேது க்ரஹம் ஞானாகாரகர். இந்த சித்ரகுப்தனின் பணி என்னவென்றால் இந்த ப்ரபஞ்ஜம் பூலோகம் முழுவதும் உயிர் பிராணிகளாக பிறந்த அனைத்திற்கும் மனிதப் பிறவிகளாக பிறந்த நாம் அனைவரும் தினந்தோறும் செய்ய கூடிய பாவம், புண்ணியம் அனைத்தையும் தினந்தோறும் எழுதி நாம் அனைவரும் ஜநனம் எடுத்து மரணம் அடைந்தவுடன் நம்முடைய பாவம் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் யமதர்மராஜரிடம் எடுத்துரைத்து நமக்கு தண்டனை வழங்கக் கூடியவர். இந்த சித்ரகுப்தன் அவருடைய பிறந்தநாளான இந்த தினத்தில் மட்டும் உயிர் பிராணிகளாக இருக்கும் ஸகல ஜீவ ராசிகளின், மனிதப் பிறவிகளாக இருக்கும் இன்றைய தினத்தின் பாவம் புண்ணியம் கணக்குகளை எழுத மாட்டார். ஆனால் இந்த நன்நாளில் நடக்கும் அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொண்டு மறுதினம் பாவம் புண்ணியம் கணக்குகளை இரு மடங்காக எழுதுவார்.
ஆகவே இன்றைய தினத்தில் நாம் அனைவரும் நமது அருகாமையில் வேதம் படித்த ப்ராஹ்மணர் வேத ஸாஸ்த்திரம் தெரிந்த ப்ராஹ்மணரை ஸ்ரீ சித்ரகுப்தராக வரித்து ஆவாஹணம் செய்து அவருக்கு தங்களால் இயன்ற அளவு வஸ்திரம், பச்சை அரிசி, தாண்ய வகைகள், பதார்த்தங்கள் காய்கறிகள், வெற்றிலை பாக்கு பழ வகைகள் முழு தேங்காய் தங்களால் இயன்ற அளவு தக்ஷணை வைத்து அந்த ப்ராஹ்மணரிடம் கொடுத்து அவருடைய திருப்பாதங்களில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் இதுவரை செய்த பாவங்கள் ஓரளவு நீங்கி புண்ணியமானது இரு மடங்காக அதிகரித்து வேத ப்ராஹ்மணருடைய, ஸ்ரீ சித்ரகுப்தருடைய பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

