#சாத்தான்குளம் news சட்டம் ஓர்
வலிமையானது,
எல்லாவற்றிற்கும் மேலானது,
அது
நேர்மையாக
தீர்ப்பை
கூறும் சமயத்தில்
சட்டம் 99 முறை தோற்கலாம் மனித தவறால்...
ஆனால் அது தன் கடமையைச் செய்யும் பொழுது யாரும் அதன் முன் நிற்க முடியாது.
தீர்ப்பின்_கூறுகள்:
சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்தது ஏன்? -
மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரம்*
ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது.
சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர்.
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும்.
அந்த வகையில்
இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது.
குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.
வேலியே பயிரை மேய்ந்து அதிகார அதிக பிரயோகம் செய்துள்ளனர்.
தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர்.
இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.
குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது.
தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.
குற்றவாளிகள் அதிகாரத்தை அதிகபிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும்.
பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ,
மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.
காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும்,
இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர்.
இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள்.
அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது.
வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது.
இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது.
9 பேருக்கும்
தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட
பின்னர்
பேனாவின்
முள் நுனியை
உடைத்தார்
நீதிபதி
முத்துக்குமரன்..
இது போன்று
இனி நடக்காமல் இருக்கவும்
குற்றம் புரிபவர்கள் இனி பயப்படவும்
இந்த தீர்ப்பு முக்கியமானது..
செய்தி


