#உதிர்ந்த_பூ..
ஆசைப்பட்ட வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தேன். விதி விளையாடிவிட்டது.. தந்தையின் கவுரவத்துக்காக முகம் தெரியாத ஒருவனுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கூட சரியாக வாழவில்லை. பிறந்து வீட்டுக்கு வந்து விட்டேன். அவன் குடிகாரனும் அல்ல
குடிகாரன் கூட போதை தெளிந்தவுடன் தன் மனைவிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பான்.
ஆனால் எனக்கு வாய்த்த கணவன் ஒரு சந்தேகப் பேரொளி. காயத்துக்கு மருந்து போடும் புருஷனை தான் மனைவிக்கு பிடிக்கும். காயப்படுத்தி விட்டு காயத்தை குத்திக் கொண்டு இருந்தால் இந்த மனைவிக்குத் தான் பிடிக்கும் அதனாலதான் வந்துவிட்டேன் என் தாய் வீட்டுக்கு...
என் தந்தையிடம் கண்ணீர் விட்டு அழுதேன் என்ன செய்வது சமாளித்து வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டார்.. ஒரு மாதம் வீட்டில் இருந்தேன் என் உறவினர்கள் என்னை மூளை சலவை செய்து அழைத்துக் கொண்டு என் கணவர் வீட்டில் சேர்த்து விட்டார்கள்...
ஒரு மாத காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. பழைய குருடி கதவைத் திருடி போல வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது..
ஒரு நாள் தெருவில் மல்லிகை பூ வந்தது நான் வாங்கி தலையில் வைத்துக் கொண்டேன். இப்போது பூ வைத்து யாரை பார்க்க போகிறாய்? என்று கேட்டான் என் கணவன் தலையில் வைத்த பூவை தூக்கி எரிந்து விட்டேன்
அதற்குப் பிறகு பூ வைக்கவே மறந்து விட்டேன் 😭..
ஒரு நாள் நல்ல புடவை கட்டினேன் நல்ல புடவை கட்டி யாரை பார்க்க போற என்று கேட்டான். எனக்கு கோபம் வந்துவிட்டது இனிமேல் இவன் கூட ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்...
.
மூன்று மாதம் கழித்து ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு என்னை கூப்பிட வந்தான் நான் பேசியதெல்லாம் தவறுதான் என்று சொன்னான். ஊர் பெரியவர்கள் அவன் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டான் இனிமேல் அவன் தவறு செய்தால் நாங்க இருக்கோம் என்று சொல்லி திரும்பவும் வாழ வேண்டும் என்று சொன்னார்கள் நான் முடியவே முடியாது என்று சொன்னேன்..
என்னுடைய தகப்பனாரும் ஊர் பெரியவர்கள் வந்து சொல்கிறார்கள் நீ போக வேண்டும் என்று சொன்னார் சரி நான் போகிறேன் ஆனால் நாளை காலை பிணமாக தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டேன்..
உன்னை பிணமாக பார்க்க எனக்கு விருப்பமில்லை உன் விருப்பப்படி இங்கே இரு என்று சொல்லிவிட்டார் வந்த பெரியவர்களும் போயிட்டார்கள் அதற்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்தது என் வாழ்க்கையில் இருந்து விவகாரத்து பெற்றேன்..
தகப்பன் வீட்டில் சந்தோஷமாக வாழவில்லை என்றாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.. நல்ல புடவை கட்டுனேன் தலையில் பூ வைத்தேன்
யாரும் எதுவும் சொல்ல முடியாது..
என் தகப்பனாரிடம் வாழ வேண்டி பிள்ளையை வீட்டில் வைத்துப் பார்க்க கூடாது இரண்டாவது திருமணம் முடித்து என்று சொன்னார்கள்...
என்னுடைய தகப்பனாரும் தெரிந்த நபர்களிடம் சொன்னார் தெரிந்தவர்களும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவகாரத்தான ஒருவரை அழைத்து வீட்டுக்கு வந்தார்கள். நானும் வந்தவர்களை வரவேற்றேன் யாரோ அப்பாவை தேடி வந்திருக்கிறார் என்று வெளியே போன எங்க அப்பா வந்தார் என்ன விசேஷம் என்று கேட்டேன் உனக்கு இரண்டாவது திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று சொன்னார் அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்றார்... நான் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். திரும்பவும் நான் என் நிம்மதியை இழக்க வேண்டுமா? எனக்கு திருமணமே வேண்டாம் என்னுடைய தம்பி தங்கைகள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லா இருந்தால் போதும் நீயும் அம்மாவும் இருக்கும் வரை என்னை பார்த்துக் கொள்வீர்கள் அதன் பிறகு தம்பி என்னை பார்த்துக் கொள்வான் தங்கை இருக்கிறாள் தங்கை பிள்ளைகளும் என்னை கவனத்திற்கு கொள்வார்கள் என்று சொன்னேன்.
வந்தவர்கள் வெளியே போய் விட்டார்கள் அதற்கு பிறகு இரண்டாவது திருமணத்திற்கு யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை..
இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் நமக்கென்று ஒரு பிள்ளை இருந்தால் நல்லா இருக்குமோ? என்று தோன்றும்.
தம்பி பிள்ளையும் தங்கச்சி புள்ளையும் வளர்த்தாலும் ஒரு சில நேரங்களில் அவர்கள் செயலால் கண் கலங்கி விடுகிறது....
எல்லோருக்கும் சொல்ல வருவது என்னவென்றால் கண்டிப்பாக இரண்டாவது திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
#✍️Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes


