தூத்துக்குடி அருகே சங்கரப்பேரியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 141 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கருப்பசாமியின் புகழ் பாடி வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவால் சங்கரப்பேரி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

