காலை ஜெபம் 8/4/26 (புதன்கிழமை)
எங்கள் அன்பின் பரிசுத்த பரலோக தந்தையே இறைவா! உம்மை போற்றுகிறோம்! புகழ்கிறோம்! நன்றி கூறுகின்றோம்! ஆண்டவரை தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப, ஆண்டவரே! இந்த நாளிலே உம்மை தேடி வந்து ஜெபிக்கக்கூடிய ஒவ்வொருவருடைய உள்ளமும் இல்லமும் ஆசிர்வதிக்கப்படுவதாக. ஆண்டவரே! உமது திருப்பெயருக்கு வல்லமை உண்டு என்பதை உணர்கின்றோம். ஆண்டவரே! உமது ஆற்றலையும், உமது திருமுகத்தை இடையறாது தேடக்கூடிய ஒவ்வொரு பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருக்க ஆசீர்வதித்தருளும். இன்றைய முதல் வாசகத்தில், பேதுருவும் யோவானும் பிச்சை கேட்பதற்காக இருந்த மனிதரைப் பார்த்து, எங்களிடம் பொன்னும் வெள்ளியும் இல்லை ஆனால் உள்ளதை உனக்கு கொடுக்கிறோம் என்று சொல்லி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் புதுமைகளை செய்தது போல, ஆண்டவரே! இதோ நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் வாழ்விலே மேலான காரியங்களை செய்வதற்கு, காண்பதற்கு உமது பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். ஆண்டவரே! தாவீதின் திருமகனே! எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் இரக்கமாயிரும். சாவை வென்ற உயிர்த்த ஆண்டவரே! சமாதானத்தையும் அமைதியும் கொடுப்பவரே! எங்களுடைய உள்ளத்தில் அமைதியை கொடுத்து விடும். எதிர்கால வாழ்வை நினைத்து, பல வேலைகளில் அச்சத்தோடு பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிள்ளைகளின் வாழ்வை நினைத்து சோர்ந்து போய் இருக்கின்றோம். ஆண்டவரே! உமது உடனிருப்பு எங்களுக்கு எப்போதும் இருப்பதாக. #✝️இயேசுவே ஜீவன் அப்போஸ்தலர்களை வழி நடத்தியது போல எங்களையும் நீர் கரம் பிடித்து வழி நடத்தியருள வேண்டுமென்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக ஜெபிக்கிறோம் வல்லமையுள்ள நல்ல தகப்பனே... ஆமென்!!! ஆமென்!!! ஆமென்!!

