கள்வனே! கள்ளும் தேனடா! 3🐝,
https://pratilipi.app.link/hw1IAs90X3b
முன்பு இருளடைந்து இருந்த அறை, இப்போது மிளிரும் விளக்கொளியின் உபயத்தால் நன்றாக பார்க்க முடிந்தது.
சிறிய படுக்கையறையில் ஒற்றை நபர் படுக்கக் கூடிய கட்டிலும், துணிகள் கலைந்து கிடந்த வாட்ரோபும் கண்டு தலை சுற்றிட, பாத்ரூம் எங்கே என அவஸ்தையாக தேடியவளுக்கு அப்பாடா என்றிருந்தது.
சட்டென குனிந்து தன் கரத்தை காண, முன்பு கட்டி இருந்த கை சங்கிலி இல்லாமல் வெறுமையாக இருப்பதை கண்டு நிம்மதி மூச்சி விட்டவளாக, ஒரு மூலையில் இருந்த நீரறைக்கு ஓடிய முக்தா, அவசர தேவையினை முடித்து, முகத்தை கழுவி சுத்தம் செய்தவளாக தன் கிழிந்த ஆடையினை தவிப்பாக கண்டாள்.
"எப்டி கிழிஞ்சிது.. காயம் கூட இருக்கு.." நடுக்கமாக முதுகுபுறத்தை பார்த்த முக்தா,
"நிரோஜ் கூப்பிட்டான்னு அந்த காட்டு வீட்டுக்கு போனேன், அங்கிருந்த எல்லாருக்கும் எடுத்துட்டு போன டீ பன் பிஸ்கட் எல்லாம் கொடுத்துட்டு, காட்டுப் பாதைல ஒத்தையா நல்லபடியா தானே நடந்து வந்தேன்..
அப்புறம் எப்டி இவன் கையில மாட்டினேன்.. இந்நேரம் நான் காணாம போனதை கண்டுபிடிச்சி, நிரோஜ் என்ன தேடத் தொடங்கி இருப்பானா?" மண்டை வலிக்க யோசனை செய்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் நடந்தது எதுவும் நினைவின்றி போனது. #💘Love Quotes & Videos #💞Feel My Love💖 #status #romance #love


