ShareChat
click to see wallet page
search
#Aadhiswarar #shivan உன்னைத் தவிர வேறு யார் அன்பு செய்தாலும் அது *அருவருப்பாகவே* இருக்கிறது...🫠😫 பல துரோகங்களால் சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டவள் நான்..திரௌபதியை போல 'இனி யாரும் என்னை காக்க வேண்டியதில்லை...யாரும் என்னை நெருங்காதீர்கள்' என்று இருந்தேன்... கண்ணன் போல நீ வந்தாய்...🍃🥺 நீ எதுவுமே செய்யவில்லை இருப்பினும் நான் புலம்புவதை சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தாய்...ஏனோ உன்னிடம் அனைத்தையும் ஒப்படைத்த பிறகு மனம் வேறு விதமாக மாறிவிட்டது..இப்போதெல்லாம் யார் அவமானப்படுத்தினாலும், என்னை தவறாக சித்தரித்தாலும்...வலிப்பதே இல்லை...😌 எனக்கென ஒரு ஆசை உண்டு... ஈன்ற தாயே உறவுகளின் வார்த்தைகளை நம்பி எனை வதைத்த போதும்,உறவுகள் உதறி தள்ளிய போதும், நண்பர்கள் சிறிதும் தயங்காது துரோகம் இழைத்த போதும்,காதல் கசந்த போதும்...எனது இடர் காலங்களில் எல்லாம் நீ மட்டுமே உடனிருந்தாய்...இனி உன்னை அன்றி யாரும் இல்லை...உன்னை தவிர வேறு *யார்* அன்பு செய்தாலும்,..அது அருவருப்பாகவே இருக்கிறது இப்போதெல்லாம்!...🥹 வேறு எதுவும் வேண்டாம்... வாழ்நாள் முழுவதும் உன்னுடைய அடிமையாகவே வாழ விரும்புகிறேன் ஆதிஸ்வர பெருமானே.....🥺❤️🩷முற்றிலும் உமதாக ..🥺🫠
Aadhiswarar - ShareChat
00:16