#எச்சரிக்கை
எனக்குள் ஒரு அச்சம் இருக்கிறது அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி...
என்னை பொறுத்தவரை ஒரு விழிப்புணர்வாகவே பார்க்கிறேன்...
அரசியல் என்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையில் அதுவும் ஒரு பகுதி மட்டுமே!
சமீபகாலமாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு சில இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் செயல்பாடுகள் மிகுந்த கவலையையும், அச்சத்தையும் உண்டாக்குகின்றன...
"தன் குடும்பத்தினர் தலைவருக்கு ஓட்டுப் போடாவிட்டால் விஷம் வைப்பேன்",
"பிள்ளையை விட தலைவனே முக்கியம்",
"தேர்வை விட சினிமாவே பெரிது"
போன்ற பேச்சுகள் சாதாரணமானவை அல்ல, இவை ஒருவித 'தீவிர மனப்பிறழ்வு' (Fanaticism) நிலையை நோக்கி அவர்கள் செல்வதைக் காட்டுகின்றன...
உணர்ச்சிவசப்படும் தலைமுறை
திரையில் தோன்றும் ஒரு பிம்பத்திற்காகத் தன் உயிரையும், உறவுகளையும் துச்சமாக மதிக்கும் இந்தப் போக்கு ஒரு ஆபத்தான கலாச்சாரம்....
இத்தகைய மனநிலையில் இருப்பவர்கள், தங்கள் தலைவனின் தோல்வியை ஒருபோதும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க மாட்டார்கள்...
ஒருவேளை தேர்தல் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமையாவிட்டால், அவர்கள் எடுக்கக்கூடிய விபரீத முடிவுகள் நம் குடும்பங்களைப் பேரழிவிற்கு உள்ளாக்கும்...
அரசியல் தலைவர்கள் தங்கள் ரசிகர்களின் இத்தகைய அதீதப் போக்கைக் கட்டுப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு அறிக்கைகளை வெளியிடவோ பெரும்பாலும் முன்வருவதில்லை...
அவர்கள் தங்கள் பலத்தைக் கூட்டத்தில் தான் பார்க்கிறார்கள். எனவே, உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் பெற்றோராகிய உங்களுக்கே உள்ளது...
பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
தேர்தல் முடிவு வரும் வரை உங்கள் பிள்ளைகளிடம் அதிகமாக உரையாடுங்கள்...
உங்கள் பிள்ளைகளிடம் அரசியலைப் பற்றிப் பேசுங்கள்...
வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தின் இயல்பு என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்...
அதீத பித்துப் பிடித்த நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்கத் தயங்காதீர்கள்...
மரணம் என்பது கேள்விப்படும் வரை ஒரு செய்திதான்...
ஆனால், அது நம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் போது தான் அதன் வீரியமும், இழப்பின் வேதனையும் புரியும்...
உங்கள் பிள்ளை உங்களுக்கு விலைமதிப்பற்ற சொத்து என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்...
எதார்த்தத்தைப் புரிந்து கொள்வோம்
அரசியலில் ஆயிரம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்...
நீங்கள் ஒரு தலைவரை ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால், ஒரு இழப்பின் போது ஏற்படும் வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான்....
எங்கள் தலைவர் "விஜய் தோல்வி அடைவார்னு சொல்கிறாயா" என்று என் கமெண்டில் வந்து முரண்டு பிடிக்காதீர்கள்...
"ஒருவேளை தோல்வி அடைந்தால் என் பிள்ளையின் மனநிலை என்னவாகும்?" என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்....
இந்த நிலையில் உங்கள் அண்ணன் தம்பி அக்கா தங்கை நண்பன் உறவுக்காரன் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்..
அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு சேருங்கள்...
ஏன் திமுக அதிமுக நதக விற்கெல்லாம் இது பொருந்தாதா என வியாக்கியானம் பேசாதீர்கள்..
அவர்களெல்லாம் பல தோல்விகளை கண்டு இந்த விசயத்தில் பன்பட்டு நிற்கிறார்கள்..
இறுதியாக ஒன்றை சொல்கிறேன்...
விஜய்யோ அல்லது வேறு எந்தத் தலைவரோ, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயரத்தில் இருக்கிறார்கள்...
ஆனால் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை என்பது இப்போதுதான் துளிர்விடத் தொடங்குகிறது...
கேடுகெட்ட சிலரின் பேச்சைக் கேட்டு உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும், உயிரையும் அடகு வைக்காதீர்கள்...
அரசியல் கடலில் எத்தனையோ அலைகள் வரும், போகும். ஆனால் உங்கள் குடும்பம் எனும் கூடாரம் நிலையானது..
அதைச் சிதைக்காமல் காப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது....
#கூத்தாநல்லூர்_ஜின்னா
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #🕌இஸ்லாம் #இது தான் இஸ்லாம் " #Islamic post

