#🦁Lion Attitude Status🤘 நாட்டில் உள்ள ஏழை எளிய பிள்ளைகளின் உணவு, கல்வி, மருத்துவம், ஆடை, கழிவறை போன்ற அடிப்படை வசதிகளுக்காக வெளிநாட்டில் இயங்கும் மிஷினரிகளிடமிருந்து தாராளமாக பணம் வாங்கிக் கொள்ளலாம், எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், ஆனால் மத்திய அரசு சொல்லும் அரசின் SBI வங்கி கணக்கு மூலமாகத்தான் வாங்க வேண்டும், வாங்கிய பணத்தில் 10 சதவீதம் மட்டும் தான் நிர்வாக வேலைகளுக்கு செலவு செய்ய வேண்டும் மீதி 90 சதவீதம் பணம் என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அந்த நோக்கத்திற்காக மட்டும்தான் செலவு செய்ய வேண்டும் என்று FCRA சட்டத்தில் மிகத் தெளிவான வரைமுறைகள் இருக்கும் போது ஏன் உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்? பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதற்காகவா?
இந்தச் சட்டம் ஒருபோதும் திரும்ப பெற மாட்டாது, இந்திய கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களை படம்பிடிக்க வேண்டியது, அதன் பிறகு அந்த வீடியோவை அல்லது படத்தை மேற்கூலக நாடுகளில் உள்ள மதமாற்று ஏஜெண்டுகள் அதாவது வெளிநாட்டு மிஷினரிகளுக்கு போட்டு காட்டி, ஐயோ பாருங்கள் எங்கள் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களை அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை எனவே அவர்களுக்கு கல்வி கழிவறை, உணவு, உறைவிடம் துணி போன்ற அடிப்படை வசதிகளை நாங்கள் செய்து கொடுக்கப் போகிறோம் எங்களுக்கு பணம் தாருங்கள் என்று கெஞ்சி பிச்சை எடுக்க வேண்டியது, கோடி கோடியான டாலர்களை வாங்கிக் கொண்டு வர வேண்டியது, அதில் ஒரு பத்து சதவீதத்தை ஏழை எளிய மக்களுக்கு பெயருக்கு செலவு செய்து விட்டு நல்ல படம் வீடியோ எல்லாம் எடுத்து முழுவதும் செலவு செய்தது போல மேற்கூலக நாட்டு வெள்ளைக்காரர்களுக்கு காட்ட வேண்டியது.
ஆனால் 90 சதவீத பணத்தை நீங்களே ஆட்டை போட்டு வெளிநாட்டு இறக்குமதி கார்களின் வளம் வருவது, பங்களாக்களில் வாழ்வது போன்ற சுகபோக வாழ்க்கை வாழ்வது போன்ற இனி வாழ முடியாது என்பதால் உண்ணாவிரதம் இருக்க போகிறீர்களா?
Thanga Raj M


