#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் காலை ஜெபம்*
"ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்".
(திருப்பாடல் 98: 1-4)
நம்பிக்கையைத் தருகின்ற நல்அமுதே! என் வாழ்வை நம்பிக்கையில் துலங்க செய்பவரே! உம்மை தாழ்ந்து, பணிந்து ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
அன்னை மரியின் அரவணைப்பில், தூதர்களின் பாதுகாப்பில், கண்விழித்து நான் மீண்டும் வாழவும், உம்மைப் போற்றி, புகழவும் என் ஆன்மாவின் மீட்புக்காகவும், மீண்டும் ஒரு நாளை தந்ததற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
*"நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”* என்று கூறிய என் இயேசுவே, என் துன்பங்களை துடைத்து, அதை ஆசீர்வாதமாக மாற்றும் வல்லமை உம்மிடமே உள்ளது.
இறைவா! உம் திருமுகத்தை தேடவும், உம் திருவழியில் நடக்கவும், என் முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் உம்மை அன்பு செய்யவும், உமக்காக வாழவும், பாவத்தை விட்டு விலகவும் அருள்புரியும்.
இயேசு, மரி! சூசை! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற... (1)
அருள் நிறைந்த...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*


