ஶ்ரீ ரமண ஸஹஸ்ரம்
836. செய்யாத மாதவமுந் தீராவென் புன்குணமு
மையாநீ யெண்ணி யகலாதே — கையாலென்
சென்னிமிசைத் தீண்டித் திருவருளைப் பாய்ச்சியெனை
யுன்னிடமே வைத்துள் ளுறை.
நான் செய்து முடிக்காத நல்ல தவத்தையும், நான் விலக்கி யொழிக்காத அற்ப குணங்களையும் கருதிப் பார்த்து, ஐயனே, நீ என்னை விட்டு அகலாதே. உன் அருட்கரங்களால் என் சிரத்தைத் தீண்டி, உன் திருவருளை என்னுள் பாய்ச்சி, என்னை எப்பொழுதும் உன்னிடமே இருக்க வைத்து, நீயும் என் உள்ளத்திலேயே உறைவாயாக.
அப்பனேஅருணாசலம்.
🙏🙏🙏🙏🙏🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி



