B. CELLIN
#👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இணைந்து செபிப்போம்*
*ஆண்டவர் இயேசுவே, உம் நியமங்களால் என்னை வழிநடத்துபவரே! உம்மை துதிக்கின்றேன். என் ஆலோசகரே! உம்மை புகழுகின்றேன். மெய் ஞானத்தால் எனக்கு வாழ்வு தருபவரே! எனக்கு வழிகட்டுபவரே! உமக்கு நன்றி கூறுகின்றேன்.*
*“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளை போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்” என உறுதியாக எமக்கு சொல்வதை, இன்றைய இறைவார்த்தையில் வாசிக்கின்றேனே. வழி தவறிபோன என்னைத் தேடி வந்தவரே! நன்றியப்பா. இயேசுவே! என்னை மன்னியும்; வழிதப்பி போன என்னை திரும்பக்கூட்டி வாரும்; நலிந்த என் மனதை திடப்படுத்தும்; பிணியுற்று இருக்கும் என்னை குணமளியும்; காயமுற்று இருக்கும் என் காயத்திற்கு கட்டுப்போடும்; உமது மீட்பின் மகிழ்சியால் என்னை நிறைத்தருளும்; எனக்காய் பேரார்வமாய், ஆவலாய் இருக்கும் என் இயேசுவே! என்னை இன்று உமது செல்லப் பிள்ளையாக உருமாற்று; அதனால் உமது விண்ணரசையும் , உமது திருமுக தரிசனத்தையும், உமது அழகையும் பார்த்து, அவற்றை அனுபவிக்க கட்டளையிட்டருளும்.*
*ஆண்டவரே இயேசுவே! இன்றைய நாளில் என்னை பாதுகாரும். என் கையை பிடித்து வழிநடத்தும். என்னுடைய வானதூதர் உமது திருமுன் இருந்து, உமது தெய்வீக தரிசனத்தை அனுபவிப்பதை போல்; நானும் கண்டிட அருள் தர வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தால் செபிக்கின்றேன். ஆமென்.*
நன்றி - தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம்