சேகர்
#காதல் கவிதைகள் 🎈🌷🥀 #💝💌 கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வேறெதுவும் என்னை ஈர்க்காததால்
மனம் எதையும் தன்னருகே
சேர்காததால்
இதுநாள் வரை உன்னை சார்ந்தே
இருந்ததால்
நீ மட்டுமே என் உலகம் என்றிருந்தேன்
வேறொரு உலகம் இருப்பதை எனக்கு
காட்ட விலகிப் போனாயோ
இன்று நீ இல்லாமல் பெருங்கூட்டத்தில்
வழி தவறிய குழந்தையாய் மனம் கதறுகிறது
புயல் காற்று தாக்கி கரைதட்டிய கப்பலாய்
நீ இல்லா தனிமையை முதன்
முதலாய் உணர்கிறேன்