D Muthu Prakash, Kanchipuram 💐
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 12ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.06.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
திருவாசகம் 4 தொடர்ச்சி
==========================
அதை உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ் சரி, இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து, இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள். பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே, பேய் பல சீவசெந்து ஊர்வனம் புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார். எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம் இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம் ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க, அதையறிந்து நீங்களும் ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார்,
.
விளக்கம்:
=========
மக்கள் அறிய உபதேசங்களை சொல்லிக் கொண்டு இருந்த போது உலக மக்கள் கேட்டு முன்புள்ள ஆகமங்களின் திருவாசகங்களும் இவர் சொல்லுகின்ற திருவாசகங்களும் ஒத்திருக்கின்ற காரணத்தால் நம் முன் உபதேசித்துக் கொண்டிருக்கின்ற இவர் தாம் வைகுண்டர் என்று அறிந்தனர். பிறகு இவருடைய இடத்திற்கு நாமும் செல்லுவோம் என்று அங்கு வந்தனர். வைகுண்டர் இவ்வுலகில் வாழுகின்ற எல்லா உயிர்களும் அறியும்படி உபதேசித்தார். வைகுண்டர் பிறந்து தமக்குக் காணிக்கை, கைக்கூலி, காவடி, ஆடு கிடா, கோழி, பன்றி போன்ற இரத்த வெறி பூஜைகளும் தீப தூபங்களும், இலைப்பட்டை முதலியனவும், இதுமுதல் தேவையில்லை என்று கூறினார். தருமத்தை நிலை நாட்டவும் குற்றம் கேட்கவும் நாராயணர் தவச்சிறை இருக்கும் போது இந்தப் பூஜை முதலியவற்றை யார் ஏற்றுக் கொள்ளுவார்கள் என ஆராய்ந்து பேய்கள் தாம் இவற்றை ஏற்றுக் கொள்ளும் என்பதை அறிந்தார். எனவே, பேய்களை நோக்கி, நீங்கள் பூஜை முதலிய கிரியைகளை ஏற்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என உபதேசித்தார்.
.
.
அகிலம்:
========
உடனதுகளெல்லாம் அய்யாவாணை நாங்களொன் றும் ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார். உடனே நாராயண வைகுண்ட சுவாமி தானே ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது, பேய் செய்கிற அன்னீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார். உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது பேய் செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் பேயை எரிக்கவேணு மென்று நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்.
.
விளக்கம்:
=========
உடனே அப்பேய்கள் அய்யாவின் மேல் ஆணை இட்டு சுவாமி தங்கள் உபதேசப்படி நாங்கள் இனிப் பூஜை முதலிய எவற்றையும் ஏற்க மாட்டோம் என்று கூறிச் சென்றன. பிறகு நாராயணராகிய வைகுண்டசுவாமி இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த யுகத்தில் மக்களின் நீதி பரிபாலங்களைச் சோதித்து வருகின்றபொழுது, பேயகள் செய்கின்ற கொடுமைகளை மானிடர்கள் பொறுக்க முடியாமல் வைகுண்ட சுவாமியிடம் விண்ணப்பித்தனர். உடனே, வைகுண்டரும் அவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்பொழுது பேய்கள் செய்வது கொடுமைகள் தாம் என்று அறிந்தார். பேய்களுக்குள்ள முன் ஆகமக் கணக்குகளைப் புரட்டிப் பார்த்துப் பேயை எரிக்க வேண்டும் என்று மனிதில் எண்ணி முடிவுக்கு வந்தார்.
.
.
அகிலம்:
========
பேய்களை எரித்தல்
=====================
பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார்
.
விளக்கம்:
=========
பேய்கள் பிறந்து வந்த வழிகளையும், அவை பெரிய வரங்கள் பெற்ற சமயத்தையும் தம்முடைய மாய தன்மையால் இப்பூவுலகுக்குப் பேய்கள் வந்தடைந்த நாளையும் பார்த்து நியாய வழியில் சரியான நீதியைக் கேட்டு நாம் அப்பேய்களை எரிக்க வேண்டும் என்று மனதின்கண் எண்ணி கலைமுனியை நோக்கி, முனிவனே பேய்களை எரிக்க வேண்டிய சமயம் பற்றிய முன் ஆகமக் கணக்குடன் அதை வைத்திருக்கும் பிரம்மனையும் அழைத்துக் கொண்டு இந்த வைகுண்டர் முன்பு சீக்கிரமாக வருவாயாக என்று கூறி அனுப்பினார்.
.
.
அகிலம்:
========
வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்
துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே
பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி
விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார்
.
விளக்கம்:
=========
வர வேண்டும் என்னும் செய்தியைப் பிரம்மனிடம் தெரிவித்தவுடன் வேதப்பிரம்மனும் தேவர்களும் குதிரை மீது தாவி மிகத்துரிதமாக அங்கு வந்து சேர்ந்தனர். பரம்பொருளின் அருளைப் பெற்ற வைகுண்டர், பிரம்மனைப் பார்த்து விரைவாகப் பேய்களுக்கு விதிக்கப்பட்ட முந்தைய நாள்களின் விதியினை பாரும் என்று ஆணை பிறப்பித்தார்.
.
.
அகிலம்:
========
விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடு
துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா
ஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான்
பதினை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார்
.
விளக்கம்:
=========
பேய்களின் ஆயுள் முடிவு விதியைப் பிரம்மன் பார்த்துவிட்டு வைகுண்டரிடம், அய்யாவே துதிக்கும் தன்மை கொடுக்கின்ற எனது எழுத்தையும், எனது உண்மையான மொழியினையும் நீர் கேட்பீராக. ஆதி நாராயணர்தாம் இந்த வலி மிகுந்த கலியுகத்திலே வைகுண்டர் என்னும் பெயரோடு உதித்த அன்றே இப்பேய்கள் அழிந்திருக்க வேண்டும் என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.