ShareChat
click to see wallet page
search
மகிழ்வான நாள். திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னாள் அமைச்சர் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பு நிறைந்த ஐயா MRK.Panneerselvam அவர்கள் செல்போனில் இருந்து இன்று 27_6_2026 சனிக்கிழமை காலை 7:45 மணிக்கு அழைப்பு வந்தது. எங்க இருக்க? என்னைய நல்லா இருக்கியா? சிதம்பரம் வரலையா? மறந்துட்டியா? உட்டா போதும் னு ஓடிட்டியா? என்று கரகரத்து குரலுடன் கேட்டு புல்லரிப்பை, புலகாங்கித்ததை உண்டாக்கி விட்டார். நல்லா இருக்கேன் அண்ணா, நீங்க நல்லா இருக்கீங்களா அண்ணா என்று நலம் விசாரித்து, வேதாரண்யத்துல இருக்கேன் அண்ணா. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவிற்கு எம்எல்ஏ அன்சாரி அண்ணா அழைத்தார். அன்றைய தினம் திருக்குவளை தலைவர் கலைஞர் வீட்டில் ஒரு நிகழ்ச்சி, அதனால் வர முடியவில்லை என்றேன். திருவாரூர் ல பார்க்கலாம் னு இருந்தேன் அண்ணா என்ற போது, முதல் நாள் இரவு தலைவரோடு வந்து, வாழ்த்திட்டு வந்துட்டேன் யா என்ற சொல்லி முடித்தார். கழக பற்று பாசம் என்பது இது தான். இந்த எளியவனின் எண்ணம் வந்து காலையிலையே போன் பண்ணி நலம் விசாரிக்கும் பண்பு, வேறு எந்த இயக்கத்தில் உண்டு. அதுவும் மூத்த நிர்வாகி, திமுகவில் உள்ள அண்ணன்_தம்பி பாசம் உழைப்பின் பலனை அடைந்த உத்வேகம். தோல்விகள் கண்டிருக்கலாம் கழகம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உணர்ச்சியால் உருவாக்கிய "உடன்பிறப்பே" என்ற ஒற்றை சொல்லால் ஒன்றிணைவோம். திமுகழகம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது. வழக்கறிஞர் பாரி வேதாரண்யம் #💪தி.மு.க #👌இந்த நாள் நல்ல நாள்🤝
💪தி.மு.க - கிழக்கு மாவாடம நகரதி முக சார்பில் )6 00 ನ கிழக்கு மாவாடம நகரதி முக சார்பில் )6 00 ನ - ShareChat