ShareChat
click to see wallet page
search
ராகுல் காந்தியை "பப்பு" என்று கூப்பிடும் போதெல்லாம் நாம் நெருடலாக தான் உணர்ந்தோம்.. அதை மரியாதையற்ற அரசியல் என்றே வருந்தினோம்.. ஆனால், இன்று அதே அரசியலில் தற்குறி என்கிற சொல்லை நாம் பயன்படுத்தும் போது அது ஒரு கண்ணியமற்ற அரசியல் வார்த்தை என்கிற குற்ற உணர்ச்சி ஏனோ நமக்கு இல்லாமல் போய் விட்டது... "அப்போ ராகுலும் விஜய்யும் ஒன்றா?" என்ற கேள்வி வரத்தான் செய்கிறது.. ராகுலும், விஜய்யும் ஒன்றல்ல தான்.. ஆனால் விஜய்க்கு ஆதரவளிக்கும் எல்லோரையுமே பாரபட்சம் இல்லாமல் தற்குறி கூட்டம் எனும் போது தான் யோசிக்க வைக்கிறது.. அப்படி பார்த்தால் தற்குறிகள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள்.. திருமாவளவனின் வாகனத்தில் ஏறி செவுளில் அறை வாங்கிய விசிக தொண்டனும் ஒரு தற்குறி தான்.. அறை விழுந்த வேதனையில், உலகமே பார்த்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் ஒருவேளை அந்த வாலிபன் அன்றைக்கு தற்கொலை என்கிற முடிவை எடுத்திருப்பானேயானால் அவனை அறைந்த திருமாவளவன் கூட ஒரு தற்குறி தான்.. ஆக, தற்குறிகள் எல்லா கட்சியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. எங்கேயோ யாருக்கோ ஒரு அசம்பாவிதம் நடந்தால் அது நமக்கு ஒரு செய்தி மட்டும் தான் .. ஆனால் அது நம் வீட்டிலேயே நடக்கும் போது தான் அதன் கோரம் நமக்கு புரிகிறது.. இந்த தற்குறி என்கிற வார்த்தையும் அப்படித்தான்... ஒரு நாள் என்னோடு டிவி பார்க்க உட்கார்ந்த என் மகன், "அப்பா, சீமான் பேச்சு இருந்தால் வையுங்க" என்றான்.. "என்னடா இது புதுசா இருக்கு.. சீமானை பிடிக்குமா என்ன? " என்றேன்.. "ஆமாப்பா.. வேற எந்த அரசியல்வாதிங்க பேச்சும் கேக்க நல்லா இல்லப்பா.. அதான்..." என்றான்.. இத்தனைக்கும், கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் என் மகனிடம் ஒருபோதும் நான் அரசியல் பேசியதில்லை.. என் மகளும் கூட ஒரு விஜய் ரசிகை.. அவளின் முதல் ஓட்டை அவள் பதிவிட தயாராகும் போது அவள் முகத்தில் நான் பார்த்த அந்த மகிழ்ச்சி, அது அரசியல் அல்ல… அவள் வயதுக்கு அது ஒரு வளர்ச்சி. அப்படித்தான் அதை என்னால் பார்க்க முடிந்தது.. அந்த வளர்ச்சியை பார்ப்பது என்னைப்போல் ஒரு தகப்பனுக்கு ஒரு பெருத்த சந்தோஷம்.. சீமானிடமும் விஜய்யிடம் ஏதோ ஒன்று அவர்களை கவர்ந்திருக்கிறது.. அந்த கவர்ச்சி தவறோ?.. சரியோ..? அதை அவர்களே தீர்மானித்து விட்டு போகட்டும்.. அவர்களின் தனிப்பட்ட விருப்பபடியே அவர்கள் அந்த சந்தோசத்தை அனுபவித்து விட்டு போகட்டும்.. ஒருவேளை அவர்கள் போடும் ஒட்டு நல்லதை தேர்வு செய்யுமா? அல்லது கெட்டதை தேர்வு செய்யுமா? என்கிற அறிவு கூட அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் உலகம் அவர்களுக்கு கற்று கொடுக்கும்.. அப்போது அவர்கள் அதை கற்று கொள்வார்கள்.. ஆனால் இங்கு பிரயோகிக்கப்படும் “தற்குறி” என்கிற வார்த்தை அதை பயன்படுத்துபவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு அரசியல் ஆயுதமாக இருக்கலாம்.. ஆனால் அது மனிதர்களின் மனதை கிழிக்கும் ஒரு ஆயுதமாக மாறி காயப்படுத்துவது அவர்களுக்கு புரிவதில்லை.. அந்த "தற்குறி" என்கிற வார்த்தை, ஏதோ ஒரு முகமற்ற கூட்டத்தைக் குறி வைக்கவில்லை… அது ஒரு உயிருள்ள நம் போன்ற மனிதரை குறி வைக்கிறது. அந்த “தற்குறி” என்று சொல்லப்பட்ட மனிதன் எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் எவனோ அல்ல. அந்த "தற்குறி" மனிதன் நேற்று வரை நம்மோடு சிரித்து கொண்டிருந்தவனாக இருக்கலாம். நம்முடைய வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டவனாக இருக்கலாம். அல்லது நம்முடைய குடும்பத்தினனாக இருக்கலாம்.. அது நம் பிள்ளைகளாக கூட இருக்கலாம். #💖Friday thought 💫 #friday சிந்தனை #😊Positive Stories📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
💖Friday thought 💫 - ShareChat