ShareChat
click to see wallet page
search
https://youtube.com/watch?v=q68Fp258xOg&si=sEdyxXeJcdgy_Cmc 🕉️✡️ சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை 2026 பற்றிய விளக்கம். ✡️🕉️ பராபவ தமிழ் வருஷம் சித்திரை மாதம் 18/01/5127ம் நாள் 01/05/2026 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை வேத தர்ம ஸாஸ்திரத்தில் க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் ஆகிய யுகங்களில் மனிதப் பிறவிகளாக பிறந்த எந்த வர்ணக் காரர்கள் சித்ரகுப்தனாக இருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் தான் தானங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயத்தை தான் பதிவிட இருக்கின்றோம். இந்த வீடியோ பதிவானது சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தனாக கலியுகத்தில் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மண வர்ணக் காரர்களுக்கு எந்தெந்த விசேஷங்களில் தானங்களை எந்தவிதமான தானங்களை கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய முழு விளக்கம். தானங்களை எந்தெந்த விசேஷ காலங்களில் கொடுக்க வேண்டும்: பிறந்த குழந்தைக்கு 01 வயது அப்த பூர்த்தி ஆகும் ஜென்ம நக்ஷத்திரம் தினத்தன்று, 02 வயது பூர்த்தி அன்னப்ராஸனம் தினத்தன்று, 03 வயது பூர்த்தி அக்ஷர அப்யாஸம் தினத்தன்று, கிரஹப்ரவேஸம் தினத்தன்று, விவாஹம் திருமணம், வளைகாப்பு ஸீமந்தம் தினத்தன்று, 60 வயது பூர்த்தி ஷஷ்ட்யப்த பூர்த்தி, 70 வயது பூர்த்தி பீமரதசாந்தி, 80 வயது பூர்த்தி ஸதாபிஷேகம், 90 வயது பூர்த்தி கனகாபிஷேகம் தினங்களில், நமது குடும்பத்தில் நமது தாயாரோ தகப்பனாரோ அவர்களுடைய காலம் முடிந்து அவர்கள் மரணம் அடைந்துவிட்ட நாளிலிருந்து 10வது நாள் அல்லது 11வது நாள் அவர்களுக்கு கர்மா செய்ய கூடிய தினத்தன்று, மற்றும் நமது குடும்பத்தில் எப்பொழுதெல்லாம் நமது க்ரஹத்தில் இல்லத்தில் ஹோமம் செய்யும் தினத்தன்று, சித்ரா பௌர்ணமி சித்ரகுப்தன் பூஜை தினத்தன்று தானங்களை கொடுக்க வேண்டும். கோயில்களில் ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாட்களிலும், ப்ருஹ்மோத்ஸவம் நடைபெறும் 10 நாட்களிலும் தானங்களை கொடுக்க வேண்டும். கொடுக்க வேண்டிய தஸ (10) தானங்கள்: 1. கோதானம் (பசுமாடு) ‌ 2. பூ தானம் (நிலம் பூமி) ‌ 3. ஸ்வொர்ணம் தானம் (தங்கம்) ‌‌ 4. ரஜத தானம் (வெள்ளி) 5. வஸ்த்ர தானம் (உடுத்தி கொள்ள துணி வேஷ்டி அங்கவஸ்த்திரம்), 6. தீர்த்த பாத்திரம் சொம்பு தானம் (பித்தளை, அல்லது தாமிரம் செம்பு) 7. தர்பாஸனம்/ மனப்பலகாய் தானம் (தர்பப்பாய், பலாசு மரத்தில் செய்த மனப்பலகாய்) ‌ 8. தான்ய தானங்கள் ( பச்சை அரிசி, மளிகை பொருட்கள், பதார்த்தங்கள் காய்கறிகள்) 9. பாதரக்ஷை, குடை , விசிறி தானங்கள் (செருப்பு, குடை, விசிறி) 10. புஸ்தகம் தானம் (வேத புஸ்தகம், ராமாயணம், மஹாபாரதம் புஸ்தகங்கள்), மேலை குறிப்பிட்டுள்ள தானங்களை தாங்கள் செய்ய கூடிய ஒவ்வொரு விசேஷங்களிலும் செய்ய வேண்டும். இந்த வீடியோ பதிவினில் சொல்லப் பட்டுள்ள அனைத்து விஷயங்களும் வேத தர்ம ஸாஸ்திரத்தில் மனிதப் பிறவிகளாக பிறந்த நாம் அனைவரும் நிச்சயமாக கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ள உண்மையான விஷயம். அடுத்த பதிவினில் இந்த தஸ (10) தானங்களை கொடுப்பதால் நாம் அனைவருக்கும் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பதிவிட இருக்கின்றோம். ஆகவே அடியேனுடைய அனைத்து அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் இந்த வீடியோ பதிவினை ஆரம்பம் முதல் கடைசி வரை முழுவதுமாக பார்த்து இந்நன்னாளில் அதன் ப்ரகாரம் கடைபிடித்து கொண்டு வேதம் படித்த வேத ஸாஸ்த்திரம் தெரிந்த ப்ராஹ்மணரை ஸ்ரீ சித்ரகுப்தராக வரித்து நினைத்து கொண்டு அவர்களுடைய பரிபூரண க்ருபா கடாக்ஷமானதும் பரிபூரண ஆசியும் பெற்று தாங்களுக்கும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன் வேதம் படித்த வேத தர்ம ஸாஸ்திரம் தெரிந்த ப்ராஹ்மணருக்கு தானங்களை கொடுத்து தாங்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டுமாய் தாங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள். 🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி