Sri Bala books
|| மஹாகணபதி ஸஹஸ்ரநாமம் பாஷ்யம் ||
|| MAHA GANAPATHI SAHASRANAMA BHASHYAM ||
வாழ்க்கையில் வரும் தடைகள் அனைத்திற்கும் பின்னால் இருக்கும் அந்த காரணம் என்ன?அவற்றை நீக்கி, நற்காரியங்கள் நிறைவேற வழிகாட்டும் மஹாகணபதியின் அருள் எவ்வாறு கிடைக்கும்?
ஸ்ரீ மஹாகணபதியின் ஆயிரம் திருநாமங்களையும், அவற்றின் மகிமையையும், பாராயணத்தின் பலன்களையும் விளக்கும் அரிய ஆன்மிக க்ரந்தம்.
ஸ்ரீ மஹாகணபதி ஸஹஸ்ரநாமம் என்பது ஆயிரம் திருநாமங்களின் தொகுப்பு மட்டுமல்ல…
மஹாகணபதியின் தெய்வீக ஸ்வரூபத்தையும், விக்னங்களை நீக்கும் அவரது அருட்சக்தியையும் ஆயிரம் திருநாமங்களால் போற்றும் புனித ஸ்தோத்ரம்.
இதை எவ்விதமான மனிதரும் அனைவரும் இதை படித்து பராயணம் செய்யலாம் என உத்ர பாகத்தில் கணபதியே கூறுகிறார். இது அனைவர்க்கும் பொது என...
சிவபெருமான் முப்புரங்களை வெல்ல முற்பட்டபோது, முதலில் கணபதியை வழிபடாததால் போரில் தடை ஏற்பட்டது. தடைக்குக் காரணத்தை உணர்ந்து மஹாகணபதியை வழிபட்டார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த ஸ்ரீ மஹாகணபதி, எல்லா விக்னங்களையும் நீக்கி விரும்பியதனைத்தையும் தரவல்ல தனது ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.
பக்தியுடன் ஜபிப்பதன் சிறப்பு என்ன?
இந்த நூலில் —
ஸ்ரீ மஹாகணபதி ஸஹஸ்ரநாமத்தின் மகிமையும், அதனைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸஹஸ்ரநாமத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்வதால், நீண்ட ஆயுள், உடல்நலம், மனஉறுதி, அமைதி, அறிவு, செயல் திறமை, செல்வ வளம், நல்லொழுக்கம், பராக்கிரமம், இறைஞானம் முதலிய பல்வேறு நன்மைகள் ஸ்ரீ கணபதியின் திருவருளால் கிட்டும் என இந்நூல் எடுத்துரைக்கிறது.
மேலும், ஸ்ரீ மஹாகணபதி ஸஹஸ்ரநாம பாராயணம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு இறுதிப் பொருள்களையும் எளிதில் அளிக்க வல்லது என்றும், வாழ்வில் உள்ள தடைகள் மற்றும் விக்னங்கள் நீங்கி நன்மைகள் பெருகும் என்றும் இந்நூல் விளக்குகிறது.
ஸ்ரீ அகஸ்த்தியர் ஸமுத்ரத்தை வற்றச் செய்ததைப் போல, தடைகள், விக்னங்கள் என்ற ஸமுத்ரத்தை வற்றச் செய்யும் கணேஸருக்கு நமஸ்காரங்கள்.
|| மஹாகணபதி ஸஹஸ்ரநாமம் ||
Book Details:
Name : மஹாகணபதி ஸஹஸ்ரநாமம்
Size : 5.5X8.5
Page: 327
Paper: 65 GSM Holman
Language: DEVANAKARI & TAMIL
Rate: 300/-
Publication : மணித்வீப பீடம்.
Author: மணித்வீபம் ஸ்ரீ
க்ருபானந்தநாதன்.
Highlights:
“தடைகள், விக்னங்கள் என்ற ஸமுத்ரத்தை வற்றச் செய்து, விரும்பியதனைத்தையும் அருளும் எனது ஸஹஸ்ரநாமத்தை பக்தியுடன் பாராயணம் செய்பவனுக்கு நன்மைகள் அனைத்தும் கிட்டும்.”
— ஸ்ரீ மஹாகணபதி
#🙏ஆன்மீகம் #🕉️சதுர்த்தி விரதம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏கோவில் #🙏கோவில் #book