
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மே 30-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மே 21 முதல் வசந்தோற்சவம் தொடங்குகிறது. விழாக் காலங்களில் அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காகத் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்குச் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

