https://youtube.com/watch?v=IVPkAUgkofo&si=nTLTImAM2CdaPwEs 🕉️✡️ பராபவ கலியுக தமிழ் வருஷம் 5127 சித்திரை மாதம் மாதம் சைத்ர விஷுப் புண்யகாலம் தினத்தன்று நாம் அனைவரும் செய்ய வேண்டிய செய்ய கூடாத விஷயங்கள் பற்றிய விளக்கம். ✡️🕉️
சித்திரை மாதம் 01/1/01/5127ம் நாள் 14/04/2026 செவ்வாய் கிழமை அன்று தான் சைத்ர விஷுப் புண்யகாலம்.
இந்நன்னாளில் தர்ப்பணம் செய்யும் அன்பர்கள் அனைவரும் காலையில் ஸ்நானம் செய்து விட்டு சித்திரை மாதம் ஆனது காலை 08 மணி 41 நிமிடத்திற்கு ஆரம்பம் ஆகிறது ஆகவே தர்ப்பணம் செய்யும் அடியேனுடைய அன்பு இதயங்களும் மெய்யன்பர்களும் அவரவர்களது ஸம்பிரதாயப்படி நெற்றியில் விபூதி, கோபி சந்தனம், ஸ்ரீ சூர்ணம் திருமண் நாமம் இட்டு கொண்டு எள்ளுடன் அக்ஷதை சேர்த்து தங்களது பித்ருக்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிய முழு விளக்கம் .
தர்ப்பணம் செய்யும் அன்பர்கள் தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் புண்யகாலம் தினத்தன்று ஸிரசில் தலை முதல் பாதம் வரை (கணவன், மனைவி இருவரும்) ஸ்நானம் செய்ய வேண்டும். முக்கியமாக புண்யகாலம் தினத்தன்று வாசலில் கோலம் கண்டிப்பாக போட வேண்டும். அன்றைய தினம் தங்களது தாயாருக்கோ தகப்பனாருக்கோ வருஷா வருஷம் செய்ய கூடிய ஸ்ரார்த்தம் திதி தெவஸம் வந்தால் அவர்களுக்கு தாங்கள் வருஷா வருஷம் செய்ய கூடிய பித்ரு கர்மா முடிந்தவுடன் கண்டிப்பாக வாசலில் ஜலத்தை நீரை தெளித்து கோலம் போட வேண்டும்.
01. ஒவ்வொரு புண்யகாலம் தினத்தன்று அனைத்து தரப்பினரும் தகப்பனார் இல்லாதவர்கள் கண்டிப்பாக தங்களது பித்ருக்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
02. பித்ருக்களை முன்னோர்களை நினைத்து பச்சை அரிசியில் சாதம் தயார் செய்து அதை ஒரு பெரிய அளவில் உருண்டையாக உருட்டி காகத்திற்கு வைக்க வேண்டும். பிறகு கோமாதாவிற்கு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், பச்சை அரிசியில் வெல்லம் கலந்து கொடுக்க வேண்டும். அனாதை ஆஸ்ரமத்தில் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். நமது அன்றாட பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.
3. அனைவரும் தாங்கள் சமைக்கும் சமையலில் பச்சை அரிசியில் தான் சாதம் செய்ய வேண்டும். சமைக்க வேண்டிய காய்கறிகள்: வாழைக்காய், சேனை கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரக்காய், கொத்தவரங்காய், வெள்ளை பூசணிக்காய்.
செய்ய கூடாத விஷயங்கள் பற்றிய முழு விளக்கம்.
புண்யகாலம் தினத்தன்று புருஷர்கள் ஆண்கள் ஸ்த்ரீகள் பெண்கள் தங்களது குழந்தைகள் யாருமே அமாவாசை தினத்தன்று தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
அமாவாசை தினத்தன்று புருஷர்கள் ஆண்கள் வபனம் க்ஷவரம் (shaving, cutting), தலைமுடி, வெட்டிக் கொள்வது போன்றவற்றை செய்ய கூடாது. முக்கியமாக தாயார் தகப்பனார் உள்ளவர்கள் ஸிரஸில் தலையில் ஜலத்தை நீரை விட்டு ஸ்நானம் குளிக்க கூடாது.
சமையலில் சேர்க்க கூடாத காய்கறிகள்: உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், வெங்காயம், பூண்டு, மசாலா பொடி, புலால், ஆகியவற்றை எக்காலத்திலும் எல்லா புண்யகாலம் நாட்களிலும் சேர்க்க கூடாது.
01. எல்லா விதமான சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் புதிய பணிகள் மற்றும் வெளியூர் பிரயாணங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக அமாவாசை தினத்தன்று எக்காலத்திலும் செய்ய கூடாது.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

