நாளை 5/6/2026 திருவோணம் திருநாள்!
***************************************************
நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேற, திருவோணம் விரதத்தை தவறாமல் கடைபிடியுங்கள்..!!
திருவோண விரதம்:
----------------------------------------------------------------------------------
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது.
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வில் திருப்பம் ஏற்பட வேண்டும், 16 வகையான செல்வங்களுடன் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருவோண விரதத்தை கடைபிடிக்கலாம்.
முருகப்பெருமானுக்கு எப்படி திதிகளில் சஷ்டி திதியும், நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரமும் விரத நாட்களாக கருதப்படுகிறதோ, அதே போல் பெருமாளுக்குரிய நட்சத்திர விரதம் தான் திருவோணம்.
திருவோணம் விரதம்:
----------------------------------------------------------------------------------
ஒரு மனிதனுக்கு தேவையான முக்கிய மூன்று விஷயங்களில் ஒன்று செல்வம், இரண்டாவது நல்ல உடல் ஆரோக்கியம், மூன்றாவது ஆயுள்.
இந்த மூன்றும் ஒன்றாக கிடைப்பவர்களுக்கு வாழ்வில் இம்மையிலும், மறுமையிலும் நிம்மதி இருக்கும்.
வாழும் பொழுதே சொர்க்கத்தை அனுபவிக்க இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கின்றன.
செல்வம் இருந்து ஆரோக்கியம் இல்லையெனில் அதுவும் கஷ்டம் தான். ஆரோக்கியம் இருந்து ஆயுள் இல்லை என்றால் அதுவும் கஷ்டம் தான். ஆயுள் நிறைந்த செல்வம் இல்லையென்றாலும் கஷ்டம் தான்.
இப்படி இவற்றில் ஒன்று இல்லை என்றாலும், ஒரு மனிதனுக்கு கஷ்ட காலம் தான்.
இந்த மூன்றையும் ஒன்றாக கிடைக்க செய்யக் கூடிய ஒரு அற்புதமான விரதம் தான் திருவோணம் விரதம். திருவோணம் விரதம் இருப்பவர்களுக்கு செல்வம், ஆரோக்கியம் மற்றும் ஆயுள் இந்த மூன்றும் ஒருசேர கிடைப்பதாக ஐதீகம் உண்டு.
விரதம் இருக்கும் முறை :
----------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாதமும் வரும் திருவோண நட்சதிரத்தன்று அதிகாலையில் தலைக்கு நீராடி, கடவுளைத் துதித்து, பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து, அல்லது வீட்டில் உள்ள பெருமாளின் படத்திற்கு துளசி கிடைத்தால் அதையோ அல்லது வேறு உகந்த புஷ்பத்தையோ அணிவித்து, மனமார வேண்டி கொள்ளவும்.
பின்னர், அன்று உண்ணப்போகும் உணவுப் பொருள் எதுவாக இருப்பினும், அதில் உப்பு சேர்க்காமல், உண்ண வேண்டும்.
ஒருவேளை அரிசி உணவும், மற்ற வேளைக்கு சிற்றுண்டி, பால், பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மிகுந்த பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம் திருவோணமும் வருகிறது. ஆகவே, இன்றைய தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். சகல செளபாக்கியங்களையும் பெறலாம்.
விரத பலன்கள்:
----------------------------------------------------------------------------------
வீட்டில் தரித்திரம் விலகி, சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
மனக்குறைகளும், கவலைகளும் நீங்கி மன அமைதி கிடைக்கும். சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
திருமணம் தாமதமாகும் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் விரைவில் நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்.
சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் ஏற்படும் சீரற்ற தன்மைகள் சரியாகி, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
முன்ஜென்மத்தில் செய்த பாவங்கள், கர்ம வினைகள் நீங்கும்.
தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும்.
#ஸர்வம்_ஸ்ரீ_கிருஷ்ணார்ப்பணம்
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #💵மகாலக்ஷ்மி #🙏பெருமாள்



