கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே காலகட்டத்தில்தான் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரே ஆளுநர்தான். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அங்கே சட்டமன்றத்தில் நடந்த ஆளுநர் உரையின் போது வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடவில்லை எனச் சொல்லி பாஜகவின் கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி தெரிவித்தார்.
அதே ஆளுநர் அர்லேக்கர்தான் தமிழ்நாட்டில் ஆளுநர் உரையை வாசித்தார். அப்போது வந்தே மாதரம் பாடல் பாடப்படவில்லை. வந்தே மாதரம் பாடலைக் கேரளா சட்டசபையில் முழுமையாக இசைக்காமல் போனதற்கே எதிர்ப்பு தெரிவித்த அர்லேக்கர், தமிழ்நாட்டில் வந்தேமாதரம் பாடாமல் இருந்ததற்கு அமைதியாகிவிட்டார்.
ஆளுநர் அர்லேக்கருக்கும் முதல்வர் விஜய்க்கும் டீலிங் நடந்திருக்கிறதா? முந்தைய ஆளுநர் ரவி, ஆளுநர் உரைக்கு முன்பாகத் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனச் சொன்னார். அதனை ஸ்டாலின் அரசு ஏற்கவில்லை. ஆனால் விஜய் அரசு ஏற்று கொண்டிருக்கிறது.. ’’வந்தே மாதரம் பாடலை நான் கேட்க மாட்டேன். ஆனால், தேசிய கீதம் ஆரம்பத்தில் நீ இசைக்க வேண்டும். டீலிங் ஓகேவா’’ என சத்தமில்லாமல் இருவரும் ஒப்பந்தம் போட்டுவிட்டார்களோ?
இந்தக் கேள்விக்கான விடையைத் தேர்தலுக்கு முன்பே விஜய் ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார்.
’’இந்த எல்.கே.ஜி, யு.கே.ஜி பசங்க சண்டை போட்டுப்பாங்க தெரியுமா? நம்ம பாசிசமும் நம்ம பாயாசமும் ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு, இந்த செட்டிங் எல்லாம் பண்ணி வச்சுக்கிட்டு, இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சுப்பாங்களாம் அதை வந்து மக்கள் நம்பனுமா வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ’’ #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #விஜய் #📺அரசியல் 360🔴 #அரசியல்


