🌿 இன்றைய தேவ வார்த்தை 🌿
📖 வேத வசனம்
"நீங்கள் ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து, இவ்விதமாய் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்."
— கலாத்தியர் 6:2
🎙️ தேவ செய்தி
அன்பான தேவபிள்ளைகளே,
இன்றைய உலகத்தில் பலர் வெளியில் சிரித்தாலும், உள்ளத்தில் பாரங்களை சுமந்து வாழ்கிறார்கள். சிலர் குடும்ப வேதனை, சிலர் நோய், சிலர் கடன் சுமை,சிலர் பொருளாதார தேவை, சிலர் மனஅழுத்தம், சிலர் தனிமை, சிலர் தொடர் தோல்விகள், சிலர் பொல்லாத அசுத்த ஆவியின் பிடியில், சிலர் சாபக்கட்டில், சிலர் போதையின் பிடியில், சிலர் குடும்பத்தில் திடீர் மரணம் ஆகியவற்றால் நொறுங்கி இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் தேவன் நம்மை ஒரு ஆறுதலாக, ஒரு உதவியாக, ஒரு ஜெப போராளியாக பயன்படுத்த விரும்புகிறார். “ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை மட்டும் கவனியுங்கள்” என்று அல்ல; “ஒருவரின் பாரத்தை மற்றவர் சுமருங்கள்” என்று தேவன் அழைக்கிறார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மனிதகுலத்தின் பாவ பாரத்தை சுமந்ததுபோல, நாமும் அன்போடு மற்றவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு ஜெபம், ஒரு சிறிய உதவி கூட ஒருவரின் உடைந்த இருதயத்தை எழுப்ப முடியும்.
இன்று தேவன் கேட்கிறார்:
"உன்னால் யாருடைய பாரத்தை குறைக்க முடியும்?"
ஒரு சகோதரனை தூக்கி நிறுத்தும் கை, தேவனுடைய கரமாக மாறும்.
ஒரு துயரமுள்ளவருக்காக சிந்தும் கண்ணீர், *தேவனுடைய இரக்கத்தை வெளிப்படுத்தும்.ஒரு உண்மையான ஜெபம், ஒருவரின் வாழ்க்கையை மாற்றும்.
ஆகையால் இன்று நாம் அன்பில் நடந்து, பாரங்களை பகிர்ந்து, கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவோம்.
🙏 ஜெபம்
அன்பின் தேவனே,
எங்களை சுயநலமில்லாத இருதயமுள்ளவர்களாக மாற்றும். பாரம் சுமந்து துன்பப்படுகிறவர்களை காணும் கண்களையும், உதவும் கரங்களையும், ஜெபிக்கும் இருதயத்தையும் தாரும். எங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கட்டும். ஆமென்.
🌿 இன்று யாரோ ஒருவரின் பாரத்தை குறைக்கும் மனிதராக நீங்கள் மாறுங்கள்; தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். 🌿
--✍️சகோ சுதாகர் காட்வின்
🔥ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #நம்பிக்கையுடன் வாழ்த்து செய்தி


