🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣
*திருமுறை ஓதுவோம்*
*தீதின்றி வாழ்வோம்*
🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠
*🙏🌹தேவாரம்🌹🙏*
*☀️திருமுறை4️⃣☀️*
*🌹திருப்பூந்துருத்தி🌹*
*🦚பாடல்:0848///1070🦚*
`மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா`
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹அருகடை மாலையுந் தானுடை யானழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திய்யுறையும்
திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*அருகில் இடையிடையே பச்சிலைகளை வைத்துத் தொடுத்த மாலையை உடையவனாய், அழகார்ந்த நாயகியாம் பார்வதி ஒருபாகம் பொருந்தப் பெற்றவனாய், கலப்பினால் உலகெலாமாகி நிற்பவனாய், போரிடும் படைக்கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனாய், பூந்துருத்தியுள் உறையும் செல்வத்தை உடைய ஒளி வீசும் பிறைசூடியை அடியேன் அவனடிக்கண் பணிந்து வணங்குகிறேன்.*
`எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!`
*🌹நடராஜா நடராஜா🌹*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻
*🌺திருநாவுக்கரசர்🌺*
🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்


