ShareChat
click to see wallet page
search
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருவருட்பா🌹🙏* *☀️திருமுறை2️⃣☀️* *🦚இரண்டாம் தொகுதி🦚* *🌹புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்🌹* *🌷திருவொற்றியூர்🌷* _🌻அஃதாவது புணர்ந்து இன்புறுத்துவார் போலப் பயின்று புணரா தொழுகும் சூழ்ச்சியை இறைவன் மேற்கொள்ளுதலால், பெருந்திணை நங்கை வேட்கை மீதூர்ந்து ஆற்றாமையால் தோழிக்குச் சொல்லி வருந்துவதாம். புணரா விரகு - புணரா தொழுகும் சூழ்ச்சி. பொருந்துறு வேட்கை, புணராமையால் உள்ளத்தில் தோன்றி மிகும் வேட்கை. வேட்கை மீதூர்தலால் “விண்ணினைக் குத்தி மெய்யிளைப்பவர் போல்” மெலிவுற் றுரைத்தல், வேட்கையின் இரங்கல் எனக் குறிக்கப்படுகிறது._ *🦚பாடல்:1628///5818🦚* ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ 🌹பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய் உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் உடையார் உற்றிலரே எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள் ஏறாமட்டும் ஏறுகின் றாள் செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *விளக்கம் :* *எருதேறும் பெருமானும், பிரமதேவனும் அறியமாட்டாத பேரொளிப் பொருளாகிய சிவபெருமானும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவனுமாகிய தியாகப் பெருமான் இன்னும் என்பால் வந்தாரில்லை; அதன் விளைவை என்னென்பேன்; என் செவிலித்தாய் தன் வாய் கொண்ட மட்டும் பேசி யேசுகிறாள்; சினம் சிறிதும் தணியாளாகின்றாள்; இதனால் செய்வதறியாது திகைக்கின்றேன்.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை* *அருட்பெருஞ்ஜோதி* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🦚🔥வள்ளலார்🔥🦚* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - சீத்திரை கனி தமிழ் பத்தாண்டு சீத்திரை கனி தமிழ் பத்தாண்டு - ShareChat