ShareChat
click to see wallet page
search
#🙏நமது கலாச்சாரம் #✍️தமிழ் மன்றம் #💚I Love தமிழ்நாடு #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் எங்கள் வாழ்க்கை ஏட்டின் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்திறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!” என பராசக்தியில் குணசேகரன் கர்ஜித்த வசனங்களைக் கொண்டே அதை எழுதிய முத்தமிழறிஞர் கலைஞரின் மன உறுதியை யூகிக்கலாம். அவர் நினைத்திருந்தால் வெறுமனே அரசியல் தத்துவம் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் ‘பயனுள்ள’ என்ற முன்னொட்டின் மூலமே இந்த மண்ணுக்கான அரசியலே தனக்கானதும் என்று மன உறுதியோடு தனது கருத்தை வெளியிடும் ஆற்றல் அவரிடமிருந்தது. தேர்தலில் எத்தனையோ பெரும் வெற்றிகளைப் பார்த்தபோதும் படுதோல்விகளைச் சந்தித்தபோதும் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டதில்லை அவர். ஆட்சி என்பது தோளில் போடும் துண்டு, கட்சி என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கில் தான் மன உறுதியோடு இருந்ததோடு கழகக் கண்மணிகளாம் தனது உடன்பிறப்புகளுக்கும் அதைக் கடத்தி அவர்களையெல்லாம் கொள்கைக் குன்றுகளாய் வடித்தெடுத்தவர். நெருக்கடி நிலையின்போது பத்திரிகை தணிக்கையைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் எந்த அறிவிப்பும் இல்லாமல் தனியாளாக வந்து போராடியதும், நள்ளிரவு கைதின் போது சிறைவாசலிலேயே போராடியதுமென அவரின் மன உறுதியில் எதிரிகளின் ஆற்றல் அனைத்தும் விறலுக்கு இறைத்த நீர் என்பது வரலாறு! தி.மு.கழகம் எனும் தனிப்பெரும் இயக்கம், அன்றும் - இன்றும் எதிரிகளை நடுங்க வைத்துக் கொண்டிருப்பதற்பகான அச்சாணி அந்த மன உறுதியே என நினைவுட்டியவாறு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை நெஞ்சில் வைப்போம்; கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞரின் பணி முடிக்க சூளுரைப்போம்; சுடர்முகம் தூக்குவோம்; இடர் பல வரினும் எதிர்த்து நிற்போம்; களம் காண்போம்; வெற்றிக் குவிப்போம்! #kalaignarForever #Kalaignar103
🙏நமது கலாச்சாரம் - நாள் தாக்குதலை விரும்புபவன்் ஈகலைஞர்103 நாள் தாக்குதலை விரும்புபவன்் ஈகலைஞர்103 - ShareChat