ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
மகளிர் உரிமைத்தொகையை ரூ 2,500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று அவசர ஆலோசனை நடத்தியதாக தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விரைவாகவும், தங்குதடையின்றியும் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் தீவிரமாக ஆராய்ந்ததாகத் தெரிகிறது. இந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதில் உள்ள நிதி நிலவரங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதித்த முதலமைச்சர், இதற்கான பணிகளை முடுக்கிவிடுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்...
இந்த ஆலோசனையின் முக்கிய அங்கமாக, பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், உதவித்தொகையை ரூ 2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசின் வரவிருக்கும் புதிய பட்ஜெட்டில் இந்த மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் மற்றும் உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #முன் கூட்டியே மகளிர் உரிமை தொகை. #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴