ShareChat
click to see wallet page
search
#முதுமை என்று எதுவும் இல்லை நோய்வரும் என்று இயற்கையின் எந்த சட்டமும் கிடையாது. நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நாம் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ​ வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்​. நம் கூடவே வாழும் மிருகங்களைப் கவனியுங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை நலமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள். ​நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்​...... முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் நம் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுவோம். நலமாக வாழ்வோம் . ​மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.​ அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும். ​யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.​ சிந்தனையை மாற்றுவோம்... நான் நலமாக, மகிழ்ச்சியாக, வாழ்வேன் என்று நம்புவோம். வா.. சிந்தனை நல் வணக்கங்களுடன்...
முதுமை என்று எதுவும் இல்லை - ShareChat
01:06