நண்பர்களின் பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்தும் கணவன் .தன் மனைவியை விட நண்பர்களுடன் அதிக சௌகரியமாக இருக்கும் கணவன் .நண்பர்களுடன் அதிக நேரம் ஊர் சுற்ற விரும்பும் கணவன் ,ஆனால் மனைவியுடனும் குழந்தைகளுடனும் பேச சோம்பேறித்தனமாக இருக்கும் கணவன் . அல்லது மௌனம் சாதிக்கும் கணவன் . நண்பர்களுக்கு மனப்பூர்வமாக பண உதவிகளும் மற்ற உதவிகளையும் செய்யும் கணவன் . ஆனால் மனைவி ஏதாவது உதவி கேட்டால் சாக்குப் போக்கும் சொல்லும் கணவன்.நண்பர்களுக்குத் தாராளமாக செலவழிக்கும் கணவன் .கணக்குப் பார்க்காதவன். .மனைவியிடம் குடும்பச் செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் கூட கணக்குக் கேட்கும் கணவன் .. மனைவியின் உணர்வுகளை விடத் தன் நண்பர்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கணவன்.வீட்டில் மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடாமல் நண்பர்களுடன் நாள் முழுக்க செலவிடும் கணவன். மனைவியின் ஆலோசனையை விட நண்பர்களின் ஆலோசனையை அதிகம் கேட்டு குடும்பம் நடத்தும் கணவன் .நண்பர்களில் நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். .ஆனால் ஒருசில நண்பர்கள் பொறாமையால் வெளியில் நல்லவனைப்போல ஆலோசனை சொல்வதாக நடித்து ஒரு நல்ல குடும்பத்தை கலைத்துவிடும் நண்பர்களும் உண்டு. நல்லது சொல்வதாக நினைத்துக் கொண்டு நண்பனின் குடும்பத்திற்குள் குழப்பத்தை விளைவிப்பவர்கள் தாம் இன்று அதிகம் .உன்னுடன் பழகும் நண்பர்கள் அனைவருமே நீ நல்லா இருப்பதை விரும்புவார்கள் என்று நம்பாதே.நண்பர்கள் வட்டத்தில் நல்லவன் வேடமிட்ட துரோகிகளும் இருப்பார்கள்.நீ எப்பொழுது வீழ்வாய் என்று மனதிற்குள் புழுங்குவார்கள்.நீ அவர்களைவிட நல்லா இருக்கக்கூடாதுன்னு மனதிற்குள் நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.சுயபுத்தி இல்லாமல் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்ளும் கணவன்.மனைவி குழந்தைகளை ஒரு பொருட்டாக நினைக்காத, மதிக்காத கணவன்.இப்படிப்பட்ட கணவனின் கைகளில் ஒரு குடும்பம் இருந்தால் அது சீக்கிரம் அழிந்துவிடும்.உன் வாழ்க்கையில் நீ எடுக்கும் முடிவுகள் உன் முடிவுகளா? இல்ல மூணாவது மனுஷங்களோட கட்டுப்பாட்டிலா? கணவன் மனைவி பேச வேண்டிய இடத்தில் மூணாவது மனுஷங்க பேச ஆரம்பித்தால் அந்தக் குடும்பம் மெல்ல மெல்ல சாக ஆரம்பிக்கும்.நண்பர்களின் ஆலோசனைகளைப் கேட்பது தப்பில்லை.ஆனால் கணவன் மனைவிக்குள் பிரிவை ஏற்படுத்துவது போல யாராவது பேச ஆரம்பித்தால் உன் குடும்பத்தைச் பிரிக்க நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்.சுதாரித்துக்கொள்.
உன் குடும்பத்திற்குள் சண்டை மூட்டி விட்டு குளிர்காயும் உன் நண்பர்கள் அவர்கள் பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோஷமாக இருப்பதைப் பார்.உன் குடும்ப விசயங்களை அளவுக்கு அதிகமாக நண்பர்களிடம் பகிர்ந்தால் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி உன்னை குழப்பி விடுவார்கள் .அதனால் யாரிடமும் அளவோடு பழகிக் கொள்.உயிர் கொடுப்பான் தோழன் என்பதெல்லாம் அந்தக்காலம்.உன் உதவி கிடைக்கும் வரை உன்னுடன் இருப்பான் தோழன் என்பது தான் இந்தக் காலம்.உன் குடும்பம் உன் உயிர்.அதை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தராதே.விட்டுக் கொடுக்காதே. #🚹உளவியல் சிந்தனை #👫ஃபிரண்ட்ஜோன் அப்டேட்ஸ்📢 #👬உயிர் நண்பன் #👉வாழ்க்கை பாடங்கள்


