⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
ஸ்ரீ *சித்ரா* *நித்யா*
திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திருமேனியள். பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள்.
வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள்.
கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். கருமேகம் இடையில் வரும் சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை எனும் இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.
காயத்ரி மந்திரம்:
ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்: வளர்பிறை பவுர்ணமி திதிக்கும் தேய்பிறை ப்ரதமை திதிக்கும் அதிதேவதை ஸ்ரீ சித்ரா நித்யா.
வழிபடு பலன்கள்:திடீர் அதிர்ஷ்டம் பெரும் செல்வமும் சேரும்.
எண்ணத்தில்கவனமாகஇருந்தால்சொல்லும்செயலும்சரியாகஇருக்கும் ...
ஏனெனில்எண்ணத்தின்வெளிப்பாடேசொல்லும்செயலும் ...✍🏼🌹 #god