#இந்த நாள் இனிமையாகட்டும் "பராபவ
புத்தாண்டே வருக!..
புது முத்திரை பதிக்க
சித்திரையே வருக..
எத்திசையிலும் இன்பமே பூக்க
எழிலோடு வருக..
மகிழ்ச்சி நிலைக்க
தமிழ்மகளே வருக..
சாதனை ஆண்டாய்
வரம்தர வருக..
வெற்றிகள் குவிய
வாய்ப்போடு வருக..
தோல்விகள் இல்லா
வெற்றிகள் தருக..
வலி இல்ல
வாழ்வு தர
வலிமையோடு வருக..
வன்முறை இல்லா
வாழ்வு செழிக்க "
ஸ்ரீ பராபவ ஆண்டே"
பரிவோடு வருக..
மாற்றங்கள் நிகழ
மகிழ்வோடு வருக..!
-மணி. சரவணன். பி. லிட்.
கருநிலம்
செங்கல்பட்டு மாவட்டம்💐


