https://youtube.com/watch?v=JKHoBa49KhE&si=Y1m0hpOCOpAK__gt 🕉️✡️ ஸ்ரீ நரஸிம்ஹர் ஜெயந்தி பற்றிய முழு விளக்கம். ✡️🕉️
பராபவ கலியுக தமிழ் வருஷம் சித்திரை மாதம் 17/01/5127ம் நாள் 30/04/2026 வியாழக்கிழமை அன்று தான் கேயில்களை ஆலயங்களை தவிர நாம் அனைவரது கிரஹங்களிலும் இல்லங்களிலும் ஸ்ரீ யோகலக்ஷ்மி நரஸிம்ஹர் ஜநனம் எடுத்த பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.
ஸ்ரீ நாரயணப் பெருமாள் தன்னுடைய தீவிர பக்தனாக இருக்கும் ப்ரஹ்லாதனுக்காக சித்திரை மாதம் சுக்லபக்ஷ வளர்பிறை சதுற்தஸி திதியில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக ஜநனம் எடுத்த நாள். ஹிரண்யகசிபு அசுர அரக்க குலத்தை சார்ந்தவன் அதி தீவிர சிவபக்தன் அவருக்கு ஸ்ரீ நாராயணண் என்று உச்சரித்தால் உடனே அவர்களை வதம் செய்து கொண்று போட்டு விடுவார். ஸ்ரீ பரமேஸ்வரரின் தீவிர பக்தனான ஹிரண்யகசிபு ஸ்ரீ பரமேஸ்வரரிடம் வரம் கேட்டான் என்ன வரம் என்றால் பரமேஸ்வரரே நான் உங்களது தீவிர பக்தன் அதனால் எனக்கு மரணம் ஆனது பகல் இரவு வேளைகளில் இல்லாமல் சாயரக்ஷை மாலை வேளையில் மனிதனாலோ, மும்மூர்த்திகளாலோ, தேவர்களாலோ, விலங்குகளாலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது, அதேசமயம் எனது மரணம் ஆனது வீட்டுக்குள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் எனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று கேட்டான் அதற்கு பரமேஸ்வரர் ததாஸ்து சரி கொடுத்தேன் என்றார். ஆனால் இவருடைய புதல்வன் ப்ரஹ்லாதனோ தீவிர ஸ்ரீ நாராயணப் பெருமாள் பக்தன் நாளாகநாளாக இருவருக்கும் ஸ்வாமி பக்தியில் வாக்குவாதம் அதிகரித்து தனது மகனையே ப்ரஹ்லாதனையே வதம் செய்ய துனிந்தார் அப்பொழுது ப்ரஹ்லாதன் தனது தந்தையாராக பட்ட ஹிரண்யகசிபுவிடம் என்னுடைய ஸ்ரீமந் நாராயணப் பெருமாள் இந்த அரசவையில் இருக்கும் தூண் துறும்பு அனைத்திலும் இருக்கிறார் என்று சொல்ல ஹிரண்யகசிபு ஒவ்வொரு தூணையும் தனது கதையால் உடைத்து கொண்டு வரும்போது ஒரு தூணிலிருந்து சிங்கம் முகத்தோடு ஸ்ரீ நாராயணப் பெருமாள் ஸ்ரீ நரஸிம்ஹராக அவதாரம் எடுத்தார். அதாவது மனித உருவமுமாக விலங்கு உருருவமுமாக இல்லாமல் இரண்டும் கலந்ததாக அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை அவன் கேட்ட ப்ரகாரம் வீட்டிற்குள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் இல்லாமல் நிலவாசற்படியில் தனது தொடையில் வைத்துக்கொண்டு ஸ்ரீ நரஸிம்ஹர் பெருமாள் ஹிரண்யகசிபுவை வதம் செய்தார்.
ஆகவே இந்நன்னாளில் நாம் அனைவரும் நமது க்ரஹத்தில் இல்லத்தில் ஸ்ரீ யோகலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்வாமி சித்ரபடத்திற்கு துளசி மாலை சாற்றி உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு நெய்வேத்யம் செய்து தீபாராதனை செய்து ஸ்ரீ யோகலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்வாமியின் பரிபூரண க்ருபா கடாக்ஷத்தையும் பரிபூரண ஆசியையும் பெற்று தாங்களும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மிக மிக மிக க்ஷேமமாகவும் ஸௌக்யமாகவும் ஸகல ஐஸ்வர்யத்துடனும் ஸத்ஸந்தான பாக்யத்துடனும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன் நலமுடன் இனிய ஆசீர்வாதங்கள்.
🕉️✡️ லோகாஸமஸ்தா ஸுகினோ பவந்து. ✡️🕉️ #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி

