பாஜகவின் சித்து விளையாட்டு ஆரம்பம்.
106+73+55= 234
பெரும்பான்மை கிடைக்காத சட்டமன்றம்.
இது முதல் முறையல்ல.
106 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தை முடக்கியும், 72 தொகுதிகளில் திமுகவை மிஞ்சவிட்டும், 55 தொகுதிகளுக்குள் அதிமுகவை கட்டுப்படுத்தியும், தனது பேராசையை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது பாஜக.
பெரும்பான்மை பெற 118 என்ற மேஜிக் எண் தேவைப்படுகிறது. இதில் 106 தொகுதிகளை விஜய் பெற்றிருக்கிறார். மீதம் 12 தொகுதிகள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவை. அதற்கு கால அவகாசம் 15 நாட்கள் வரை கொடுக்கப்படும். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் 106 தவெக, 5 தொகுதி காங்கிரஸ் 2 தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் 113 தொகுதிகள் திமுக கூட்டணியில் இருந்து தேறிவிட்டது.
மீதம் வேண்டியது 6 தொகுதி. அதில், அமமுக 1 அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி 5. ஆக மொத்தம் 119.
தன் போக்கிற்கு இனி ஆட வைப்பது ஒன்றிய பாஜகவின் திட்டம்.
விஜய் பாஜகவை மீறி எதுவும் செய்ய முடியாது.
அப்படி செய்தால் அதிமுக கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுக்கப்படும் ஆறு தொகுதிகளும் வாபஸ் வாங்கப்படும்.
இந்த "ட்ரம்ப்" கார்டை வைத்துக் கொண்டே மிரட்டி மிரட்டி, தான் செய்ய வேண்டியதை, செய்ய நினைத்ததை செய்து முடிக்கும் பாஜக, தனது ஆசை நிறைவேறியவுடன் இந்த ஆறு பேரையும் வெளியில் இழுத்து விட்டால் விஜயின் கதி அதோ கதி.
ஆட்டம் கலைந்து விடும்.
மீண்டும் தேர்தல்தான்! இதற்கு வெகு காலம் இல்லை. 2027க்குள்ளாகவே இது நடைபெறும்.
1.முதலில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.
2. இந்தி முக்கிய மொழியாக மாற்றம் செய்யப்படும்.
3. திருப்பரங்குன்றம் தூணில் விளக்கு ஏற்றப்படும்
4. தனக்கு பிடிக்காத எதிர்க்கட்சியினரை பொய் காரணங்கள் கூறி கைது செய்ய முற்படும்.
5. சிறுபான்மையினரில் இஸ்லாமியர்கள் முதலில் "ஜோசப்" விஜயால் ஒடுக்கப்படுவார்கள்.
6. பள்ளிகள் மூடப்படும்
7. தொழிற்சாலைகளும் மூடப்படும்
8. கல்விச்சாலைகள் இல்லாமல் பார்ப்பனரல்லத குழந்தைகள் வைக்கப்படுவார்கள்.
9. பீகார் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல வேலையில்லா திண்டாட்டமும் படிப்பறிவில்லாத மக்களும் பசி பஞ்சம் பட்டினியோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உண்டாகும்.
இதெல்லாம் காண்பதற்கு வெகு காலம் இல்லை. கூடிய விரைவில் விஜய்க்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் தெரியவரும். அப்பொழுது "குய்யோ முறையோ" என்று ஓலமிடுவார்கள்.
அதே நேரத்தில் பாஜக தனது இரும்பு கரத்தை கொண்டு விஜயை விரட்டியடிக்க இந்த ஆறு எம்எல்ஏக்களும் பயன்படுவார்கள்.
விஜய் கட்சி இரண்டாக அல்லது மூன்றாக உடைத்து பாஜக ஆள்வதற்கு வசதி செய்யப்படும். (பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது)
தமிழகம் தலைகுனியும். வறுமைக்கு தள்ளப்படும். தமிழ், குற்றுயிரும் கொலை உயிருமாக கிடக்கும்.
நூறு ஆண்டு காலமாக போராடி கிடைத்த சமூக நீதி புதைகுழிக்குள் தள்ளப்படும்.
சனாதனமும், ராமர் பட்டாபிஷேகங்களும் தமிழகத்தில் வீதி எங்கும் நடக்கும்.
இதைக் காண்பதற்குதான் இளைஞர் கூட்டம் விஜயின் பின்னால் அணி திரண்டு இருக்கிறது.
இளைஞர் கூட்டம் மட்டுமல்ல, நன்றி கெட்ட வாக்காள பெருமக்களும் விஜய்க்கு வாக்களித்திருக்கின்றனர். இதன் பயன்களையும் பலன்களையும் கூடிய விரைவில் அறுவடை செய்வார்கள்.
அப்பொழுதும் மீண்டும் திமுகவின் தயவு தேவைப்படும்! 2027 அல்லது 2028ல் மீண்டும் தேர்தல் வரும்! திமுக வெல்லும்! ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆளும்! மீண்டும் 2032-ல் நன்றி கெட்ட ஜென்மங்களான வாக்காளப் பெருமக்கள் வேறு ஒரு புதிய கட்சியையோ அல்லது இந்த கூத்தாடி விஜயயோ ஆதரிப்பார்கள் அல்லது புதிதாக எவனாவது ஒரு நடிகன் தோன்றுவான் அவனை வைத்து ஆட்டம் காண வைக்க பாஜக முற்படும். #அரசியல் #தமிழ் தேசிய அரசியல்
#அரசியல் மாற்றம்

