#🪔கார்த்திகை விரதம்🙏🏻 #ஜோதிட நண்பர்கள் மையம் #ஸ்ரீ விநாயகா ஜோதிட நிலையம்
🚩முருகபெருமான் ஆலயங்கள் : குறுக்குதுறை முருகபெருமான் ஆலயம், திருநெல்வேலி
🚩முருகபெருமானுக்கு மலைமேல் கோவில் நிரம்ப உண்டு, கடற்கரையிலும் உண்டு, அப்படியே ஆற்றோரமும் சில இடங்களில் உண்டு ஆனால் ஆற்றுக்கு நடுவே எங்கும் ஆலயமில்லை ஒரே ஒரு இடத்தை தவிர அதுதான் நெல்லை தாமிரபரணி ஆற்றின் நடுவே இருக்கும் இந்த ஆலயம்
🛕இது ஆற்றின் நடுவே கட்டபட்டதா தொடக்கமே அப்படியா என்றால் அது கொஞ்சம் கவனிக்கதக்கது, காரணம் நெல்லை பக்கம் எப்போதோ பெரிய பிரளயம் எற்பட்டு நெல்லையப்பர் ஆலயமே மண்மூடி மீண்ட வரலாறு உண்டு, அவ்வகையில் இது முன்பு மலைபாங்கான அல்லது கல்சார்ந்த இடமாக இருந்திருக்கலாம் பின் ஆற்றின் போக்கு மாறி தாமிரபரணிக்குள் அமைந்து பின் பாண்டிய மன்னர் காலத்தில் பெரிதாக கட்டபட்டிருக்கலாம்
☘️இந்த ஆலய வரலாற்றின்படி இந்த இடம் கற்கள் குவிந்த அல்லது சிற்பத்துக்கு உகந்த கற்கள் கிடைக்குமிடமாக இருந்திருக்கின்றது, திருசெந்தூர் ஆலயத்துக்கே இங்கிருந்துதான் கற்கள், சிற்பங்கள் சென்றதாக தகவல் உண்டு அங்கிருக்கும் மூலவரும் இந்த முருகனின் தோற்றத்திலேதான் அருள்பாலிப்பார் இரு ஆலயங்களுக்கும் தொடர்பு நிறைய உண்டு
👉கற்கள் சிவாமி சிலைகளாக மாறுவதால் இந்த இடத்துக்கு "திருவுருமாமலை" எனும் பெயரை பெற்றிருந்தது, பின்னாளில் தாமிரபரணி இப்பக்கம் வந்தபின் ஆற்றுக்குள் சிக்கிய இடமாயிற்று
👉இந்த ஆலயகுகை பாறையில் அப்படி முன்பு எப்போதோ உருவான முருகபெருமானின் வடிவத்தை கண்டு பக்தர்கள் வழிபட துவங்கி அது கோவிலாக மாறிற்று, தண்ணீர் குறைந்த நேரம் அப்பக்கம் வந்த பக்தர்கள் இந்த முருகனை வழிபட்டனர், பிற்கால பாண்டியர்கள் அதனை சிறிய கோவிலாக கட்டிவைத்தனர், அதிலிருந்து இந்த ஆலய வரலாறு துவங்குகின்றது
👉ஓம் வடிவில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் அப்படியே பல விதங்களில் திருசெந்தூர் ஆலயத்தோடு ஒத்துபோகின்றது, பாண்டிய ராஜ்ஜியம் வீழ்ந்து இஸ்லாமிய ஆட்சி வந்தபோது திருசெந்தூர் ஆலயம் ஐரொப்பியராலும் பலராலும் சீரழிந்தது, பின்னாளில் நாயக்க மன்னர்கள் அதனை சீரமைக்கும் போதும் திருசெந்தூர் மூலவர் சிலையின் வடிவமும் அளவும் மாதிரியும் இங்கிருந்தே சென்றது
👉பொதுவாக இறைவன் தன்னை குறுகிய வடிவ கோலத்தில் காட்டி அருல்பாலிக்குமிடம் குறுங்கை என்றாகும், திருக்குறுங்குடி எனும் வைணவதலம் அப்படி உருவானது, முருகபெருமான் குகைக்குள் கல்லில் எழுந்து குறுங்கி நின்றதால் இந்த இடமும் குறுக்குதுறை என்றானது
👆🏼பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்து வந்த ஆலயம் பின்னாளில் இன்னும் இன்னும் மேம்படுத்தபட்டு திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டுபாட்டுக்குள் சென்றது இன்று ஆற்றின் நடுவில் அமைந்திருக்கின்றது, தாமிரபரணி வற்றா நதி என்பதால் ஆண்டுமுழுவதும் இக்கோவிலின் இடபாகம் நீர் ஓடிகொண்டே இருக்கும், மழைகாலம் வந்து ஐப்பசியில் தாமிரபரணி பெருகி ஓடும்போது இக்கோவில் மூழ்கிவிடும்
👉அப்போது உற்சவரை அருகிருக்கும் மேல் கோவில் எனும் மேடான கோவிலுக்கு கொண்டு செல்வார்கள் நீர் வடிந்ததும் இந்த முருகன் கோவிலுக்கு திரும்ப எடுத்துவருவார்கள்
👉இந்த மூலவரை இப்படி ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சிலமுறை தாமிரபரணியே அபிஷெகம் செய்துகொள்ளும், அப்படி நதியே அபிஷேகம் செய்யும் ஒரே ஆலயம் இதுதான்
👆🏼தாமிரபரணி ஒரு புண்ணிய நதி, அது அகத்தியபெருமானால் உருவாக்கபட்ட ஜீவநதி, தன் தொடக்கம் முதல் முடிவு வரை எண்ணற்ற ஆலயங்களை , சக்திமிக்க ஆலயங்களை கொண்டிருக்கும் அற்புதநதி, அந்நதியே அபிஷேகம் செய்யும் முருகபெருமானும் மகா சக்திவாய்ந்தவர்
👉இங்கு கருவறையில் பாறையில் குடையப்பட்ட திருமேனியாக வள்ளி, தெய்வானையுடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார் சுப்பிரமணிய சுவாமி அவரின் உயரம் இரண்டரை அடி கருவறையில் வலது மேல் கரத்தில் வச்சிராயுதம் தாங்கியும், வலது கீழ்க் கரத்தில் மலர் ஏந்தியும், இடது மேல் கரத்தில் ஜெப மாலை கொண்டும், இடது கீழ்க்கரத்தை தொடையில் வைத்த நிலையிலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் முருகபெருமான் அப்படியே திருசெந்தூர் முருகனின் சாயல் இது
👉இந்த ஆலயமும் கல்லணை போன்றே மிக சவாலானது, காவேரி குறுக்கே அந்த கல்லணை எப்படி கட்டபட்டதோ அப்படி ஆற்றின் நடுவே இந்த கோவிலை எப்படி கட்டினார்கள் என்பது பெரிய ஆச்சரியம், அப்படியே சிறிய ஆலயம் பின்னாளில் நிலத்தின் வடிவம் மாறியதால் அற்றின் நடுவில் சிக்கியதாக கொண்டாலும் இந்நாள்வரை சிறு பழுதின்றி நிற்பது பெரும் ஆச்சரியம்
👉நடு ஆற்றில் அந்த ஆலயம் இத்தனை பலநூறு ஆண்டுகளாக நிலைத்து நிற்பது இன்னும் ஆச்சரியம், சுமார் 2 லட்சம் கன அடி நீரை தாங்கி கல்லணை போல் அசையாமல் நிற்பது மகா ஆச்சரியம்
👉அதன் அஸ்திபாரம் கல்லணை போல அவ்வளவு வலுவாக இடபட்டிருகின்றது கோவில் பீடம் அறுகோண வடிவம், அதை தாண்டி மேற்கு பக்கம் படகின் முனை போல் ஒரு முனை கூராக செல்கின்றது இது ஆற்றின் நீர் வரத்தை பிரித்துவிடுகின்றது ,நேரடியாக நீர் மோதாமல் இப்படி பிரிவதால் அழுத்தம் கோவில் மேல் வராது, மிக துல்லியமான நீர் பொறியியல் இது
👉பீடம் அறுகோண வடிவம் என்பதால் நீரின் அழுத்தம் அதிகம் வராதபடி எல்லா முனைக்கும் பிரிகின்றது இது இன்னொரு நுணுக்கம்
👉கோவில் மேல் 24 இடங்களில் துளைகள் உண்டு இவற்றின் வழி சூரிய வெளிச்சம் செல்லும் ஆனால் நேரடியாக அது கோவில் உள்தரையில் விழாது மாறாக பக்கவாட்டு சுவரில் விழுந்து பிரகாசிக்கும் இதனால் பகலெல்லாம் ஆலயத்தினும் வெளிச்சம் மின்னும் கோவிலும் குளிர்ச்சியோடு இருக்கும்
👉மழைகாலம் கோவில் நீரில் மூழ்கும்போது இந்த துளைகள் வழியே நீர் செல்வதாலும் இன்னும் பல சுழற்சியாலும் கோவிலின் சுவர்களில் கோவில் உள் நீரின் அழுத்தம் இராது அதனால் கோவில் பழுதின்றி நீடிக்கும், ஒரு பக்கம் வரும் வெள்ளம் இன்னொரு பக்கம் சென்று நீங்கும்படி வடியும்படி அழகான வடிகால் வசதியும் அமைக்கபடிருக்கின்றது
👉கருவறை வாசலில் இருபுறமும் வாயிற்காவலர்களும், வடபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், ஐம்பொன் வடிவில் நடராசர், சமய குரவர்கள் நால்வர், விநாயகர், படைத்தேவர் முதலிய திருமேனிகள் உள்ளது. தென்புறம் உள்ள அறையில் முருகனின் உலாத்திருமேனி உள்ளது.
👉இதற்கு அடுத்து இடைநாழி. அதற்கு அடுத்து கருவறை அமைந்து உள்ளது.
👉வெளியே கருவறை திருச்சுற்று உள்ளது. இங்கு தெற்கு சுற்றில் தட்சிணாமூர்த்தியும், தென்மேற்கு முனையில் விநாயகரும், வடமேற்கில் முருகனும், பைரவரும் உள்ளனர். வடக்கு சுற்றில் சண்டீசரும், அவருக்கு பின்புறம் வடக்கு சுற்றின் மேல்புறம் சுவரில் பஞ்சலிங்கம் தேவியாருடன் உள்ளார்கள். இப்பகுதி ஒரு பெரும்பாறையாக காட்சி தருகிறது. முன்பு பாறைகள் இருந்ததன் அடையாளம் இது
👉தென்முகமமாக எழிலுடன் ஐம்பொன் படிமமாக ஆறுமுகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
👉இங்கு இன்னொரு சிறப்பும் உண்டு, ஆற்று நீரில் மூழ்காத மேலை கோவில் இதன் மேற்கு பக்கம் மேட்டில் உண்டு, அங்கு பழனியாணடவர் வடிவில் முருகபெருமான் அருள்பாலிப்பார், இவரோ செந்திலாண்டவர் சாயல் அதனால் இங்கு ஒரே நேரம் பழனியாண்டவர் செந்திலாண்டவர் என இருவரையும் தரிசிக்க முடியும்
👉இங்கு இன்னொரு சிறப்பும் உண்டு கோவில் மண்டப சுவற்றில் குரங்கு ஒன்று குனிந்து நீர் அருந்துவது போல் சிற்பம் ஒன்று உண்டு, அதுதான் நீர் வரத்துக்கான அளவுகோல், அந்த குரங்கு சிற்பம் அருகே நீர்வரும்போது சங்கொலி போல ஓசை எழும் அது எச்சரிக்கை தரும், அப்படியே குரங்கு சிற்பம் நீரில் மூழ்க மூழ்க ஆற்றின் மட்டம் பற்றிய எச்சரிக்கை தெரியவரும், அவ்வளவு துல்லிய முன்னெச்செரிக்கையுடன் கட்டபட்ட ஆலயம் இது
👉இங்கு சித்திரை மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும்.
👉வைகாசி விசாகத் திருவிழா இங்கே விஷேஷம் அன்று இங்குள்ள கருவறை சுப்பிரமணியருக்கு தஙுகக் கவசம் சாத்தப்படும். அவ்வாறே
இங்கு ஆவணி மாதம் கொடியேற்றமாகி பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் ஒன்பதாம் நாளும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.
👉அப்படியே திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது
🪷நெல்லையின் அடையாளம் நிச்சயம் நெல்லையப்பர் ஆலயம், ஆனால் நெல்லையின் அதிசயம் இந்த முருகபெருமான் ஆலயம், அனுதினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி வழிபடும் ஆலயம் இது
🪷நீங்கள் எத்தனையோ ஆலயங்களுக்கு சென்றிருக்கலாம் ஆனால் ஆற்றில் நீராடிவிட்டு தரிசனம் செய்யும் வாய்ப்பு வெகுசில ஆலயங்களில்தான் அமையும், அந்த வகையில் உடல் குளிர நீராடி மனம் குளிர முருகபெருமானை தரிசிக்கலாம்
🪷அங்கு செல்லும்போது அரளிபூமாலை அணிவித்து நெய்விளக்கேற்றி முருகபெருமானை வழிபடுங்கள், உலகின் மிக மிக பழமையான அந்த ஆலயம், ஆதிகாலத்தில் கட்டபட்டதும் அற்புதமான அமைப்பும் நுணுக்கமான பொறியியலும் முருகபெருமானின் பெரும் அருளும் கொண்ட ஆலயம் உங்களுக்கு நல்ல வரம் அத்தனையும் தரும், மனமகிழ்ச்சியும் உற்சாகமும் நிரம்ப தரும்
🪷நெல்லைக்கு செல்லும் போது தாமிரபரணியில் நீராடி அந்த முருகபெருமானை தரிசிக்க மறவாதீர்கள், திருசெந்தூர் ஆலயம் போலவே பழமையான ஆலயத்தில் வீற்றிருக்கும் கந்தபிரான் உங்களுக்கு எல்லா அருளும் தருவார், தாமிரபரணி வற்றாமல் ஓடுவது போல் உங்கள் வாழ்விலும் எல்லா ஐஸ்வர்யமும் வற்றாமல் வாழசெய்வார் இது சத்தியம்.
#follower #comment #feed #explore #post #trend


