
கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற ராஜாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று (01.05.2026) கைது செய்தனர். ஆய்வாளர் மீகா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அய்யனார் ஊத்து பகுதியில் பிடிபட்ட அவரிடமிருந்து 562 மது பாட்டில்கள், ₹1,600 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது விற்பனையைத் தடுக்கப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

