#⚡ஷேர்சாட் அப்டேட் கிணற்று தவளை

🌟 ஒரு ஏரியில் ஒரு தவளை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வந்தது. மழை அதிகம் பெய்ததால் ஏரி நிறைந்து வழிந்தது. அந்த ஏரியில் நிறைந்திருந்த நீரானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. குளிரைத்தாங்கமுடியாத தவளை அருகில் இருந்த கிணற்றுக்கு சென்றது.
🌟 ஏனெனில் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்கும் என்று நினைத்து கிணற்றுக்குள் குதித்தது. அந்த கிணற்றில் பல காலமாக ஒரு பெரிய தவளை வாழ்ந்து வந்தது. அந்த தவறை இந்த ஏரி தவளையை வரவேற்று நன்கு உபசரித்தது. ஆனால் அந்த கிணற்றுக்குள் இருந்த மற்ற தவளைகளுக்கு இந்த ஏரித்தவளையைப் பிடிக்கவில்லை.
🌟 அதனால் ஏரித்தவளையை கிணற்றில் இருந்த மற்ற தவளைகள் விரட்ட முடிவு செய்தன. ஏரித்தவளையும், கிணற்றில் இருந்த பெரிய தவளையும் பேசிக் கொண்டிருப்பதை மற்ற தவளைகள் பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது கிணற்று தவளை, ஏரி தவளையிடம் நண்பா! நீ இவ்வளவு நாட்களாக எங்கு தங்கியிருந்தாய் என்று கேட்டது.
🌟 அதற்கு ஏரி தவளை, நான் ஒரு பெரிய ஏரியில் தங்கி இருந்தேன் என்றது. ஏரியா? அப்படி என்றால் என்ன என்று கேட்டது கிணற்று தவளை. அதற்கு ஏரி தவளை, இந்த கிணற்றைப் போன்ற ஒரு பெரிய நீர் நிலை என்றும், அதில் மீன், ஆமை, முதலை போன்ற உயிரினங்கள் வசித்து வருவதாகவும் கூறியது.
🌟 அதற்கு கிணற்று தவளைகள், இந்த கிணற்றை விட பெரிய நீர் நிலை என்று ஒன்று இருக்க முடியாது. நீ பொய் சொல்கிறாய் என்று கூறி கேலி செய்தன. எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏரி ஒரு பெரிய நீர் நிலை என்பதை கிணற்று தவளைகள் நம்ப மறுத்தன. மேலும் ஏரித்தவளை பொய் சொல்கிறது என்று எண்ணி அந்த ஏரித்தவளையை தாக்க முற்பட்டன.
🌟 அப்போது கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்காக ஒரு பெண் நீர் இறைக்கும் வாலியை கிணற்றுக்குள் விட்டாள். முட்டாள்களிடம் வாக்குவாதம் செய்வதைவிட ஒதுங்கி செல்வதே மேல் என்று நினைத்த ஏரித்தவளை அந்த வாலிக்குள் தாவி குதித்து மேலே வந்து ஏரியை நோக்கி நடந்தது.
நீதி : முட்டாள்களிடம் வாக்குவாதம் செய்வதைவிட விலகிச் செல்வதே நல்லது.


