
Black Cheetah🖤 on Instagram: "மறவர் சாதி மற்றும் ஆசாரி சமூகத்தை சேர்ந்த இளைஞர்களால்( இருவர் மறவர் ஒருவர் ஆசாரி) ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குள சமூகத்தை சேர்ந்த தம்பி சுபாஷ் குறித்து எந்த ஊடகங்களிலும் செய்தி வரவில்லை. கடந்த 16 ஏப்ரல் 2026 அன்று சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட தம்பி சுபாசின் தாயார் லீலா மற்றும் உறவினர்கள் கடந்த 26 மே 2026 அன்று என்னை சந்தித்து புகார் அளித்தனர். சட்ட நடவடிக்கைகளில் எவிடென்ஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது. சுபாஷ் அறுவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெரும் கல்லில் வைத்து கட்டி பாழும் கிணற்றில் வீசியிருக்கின்றனர். கொலை செய்த குற்றவாளிகள் வயது 17, 24 மற்றும் 27. எங்கள் சாதி பெண் கூட எப்படி பேசலாம் என்று கூறி இந்த கொலை நடந்துள்ளது கோகுல் ராஜ் போன்று கொல்லப்பட்டுள்ளார் சுபாஷ். ஆணவக் குற்றங்களுக்கு தனி சட்டம் இயற்றுங்கள் முதல்வரே.. எவிடென்ஸ் கதிர்."

