Varahi
#கோயில் #கோயில் தரிசனம்💐 காமாட்சி அம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் புகழ் பெற்ற சக்தி ஸ்தலமாகும். இது ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரத்துடன், அன்னை பார்வதியின் உன்னத வடிவமான காமாட்சி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாகும்.
கோயில் சிறப்பு அம்சங்கள்சக்தி பீடம்: இது உலகின் முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.ஸ்ரீ சக்கரம்: மூலவர் சன்னதிக்கு முன்பாக ஆதிசங்கரர் அமைத்த சக்தி வடிவிலான 'ஸ்ரீ சக்கரம்' உள்ளது. இங்குள்ள அனைத்து பூஜைகளும் இந்த ஸ்ரீ சக்கரத்திற்கே செய்யப்படுகின்றன.தங்கக் கோபுரம்: இக்கோயிலின் விமானம் தங்கம் வேயப்பட்டது. இது கண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.
தரிசன நேரம் (Timings)காலை: காலை 5:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.மாலை: மதியம் 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
திருவிழாக்கள்வசந்த உற்சவம் மற்றும் நவராத்திரி விழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.தை மாத பூரம் நட்சத்திரத்தில் தங்கரத உத்ஸவம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்
காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில்.
காமாட்சி அம்பாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஓர் அம்மன் கோயில் ஆகும்.
தமிழ்நாடுகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்
காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:
12.8407°N 79.7032°E
பெயர்
வேறு பெயர்(கள்):
புராண பெயர்: கச்சி
அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
தமிழ்நாடு
மாவட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவிடம்:
காஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதி:
காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:
136 m (446 அடி)
கோயில் தகவல்
மூலவர்:
காமாட்சியம்மன்
குளம்:
பஞ்ச கங்கை தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:
மாசி உற்சவம், வைகாசி வசந்த உற்சவம், ஆடித் திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பூசம் மற்றும் சங்கர ஜெயந்தி
வரலாறு
அமைத்தவர்:
அம்மனை பிரதிட்டை செய்தவர் வேதவியாசர்;
ஸ்ரீசக்கரம் பிரதிட்டை செய்தவர் ஆதிசங்கரர்
காமாட்சி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள். ஆதிசக்தியாக விளங்கும் காமாட்சியின் இந்த வடிவம் லலிதா சஹஸ்ரநாமத்தில் குறிப்பிட்ட படி உள்ளது.
தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் நாபி (தொப்புள்) விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.
கோயில் வரலாறு
காமாட்சி அம்மன் கோயில் - 1811 ஆம் ஆண்டைய ஓவியம்
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், விஸ்வ ப்ராஹ்மணர்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோவில் பொற் கொல்லர்களின் பாரம்பரியத்தை காக்கின்ற குலதெய்வமாக இருக்கிறது. விஸ்வகர்மா மக்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை. காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.
அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம்
பண்டாசுரன் எனும் கொடிய அசுரனை வதைத்து, பின் நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், பஞ்சபாணம், கரும்புவில் தரித்து ஆதிசக்தியாகக் காட்சி தருகிறார் அம்மன். லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்மன் வர்ணிக்கப்படுவது போலவே இங்கும் அவரது சிலையின் வடிவமானது தென்படுகிறது.
கோயில் அமைப்பு
கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையில் காமாக்ஷியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் திரித்துவத்தால் சூழப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.
திருக்கல்வனூர்
திருக்கல்வனூர் திவ்ய தேசம் காமாட்சி அம்மனின் கருவறைக்கு அருகில், பொ.ஊ. 7–10-ஆம் நூற்றாண்டின் ஆழ்வாரால் மகிமைப்படுத்தப்பட்ட விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இருந்தது. இக்கோயில் சிதிலமடைந்ததால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மேல் சிற்பங்கள் உள்ளன. தலவரலாறின்படி, அரூபலட்சுமியாக காட்சி தரும் மகாலட்சுமியைத் தேடி வந்த திருமாலை, அவள் ‘கள்வா’ என்று அழைத்ததால் பெருமாளுக்கு இந்த திருநாமம் ஏற்பட்டது.
உற்சவ விழாக்கள்
தொகு
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த் திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மேலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.