தொழிற்பூங்காக்கள் வானூர்தி நிலையத்தினைவிட ஆபத்தானவை. பரந்தூரை சுற்றி உள்ள ஈரநிலப் பகுதியினையும் (திட்டத்தில் சற்றேறக்குறைய 27% நிலம்) பாதுகாக்கத்தான் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தினை எதிர்த்து நாம் தமிழர் கட்சி உட்பட இவ்வளவு தொடர் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும். தொழிற்பூங்காக்களால் இந்த ஈரநிலப் பகுதி பாதிப்படைந்தால் அது சென்னைக்கு பெரும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும். மேலும், அங்குள்ள உயிர்ப்பன்மயத்தையும் விளைநிலங்களின் தன்மையினையும் பாதித்து அழிக்கும். 1100 ஏக்கருக்கு மேல் மக்கள் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்னவாக இருக்கும் என காத்திருந்து வேடிக்கைப் பார்ப்போம். #seeman mass speech #புரட்சியாளன் சீமான் #🙋♂ நாம் தமிழர் கட்சி #🐅🐅seeman🐅🐅NTK #seeman speech


