கட்சிக்காரர்களாக அன்றி யாருக்கும் வாக்களிக்கும் தன்மை கொண்ட, நடுநிலையாளரா நீங்கள் ?
யாருக்கு வாக்களிக்கலாம் என முடிவு செய்துவிட்டீர்களா ?
முடிவெடுப்பதில் குழப்பம் உள்ளோர் மட்டும் தொடரலாம்.
நாம் தமிழர், தற்குறி வெட்டிக் கழகத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்கிற எண்ணமிருந்தால் அதை இந்த நொடியே விட்டுவிடுங்கள்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிப்பது கடற்கரையில் கட்டும் மணல் வீட்டுக்கொப்பானது. பார்க்க அழகாகத் தெரியும், ஆனால் அதில் வாழ முடியாது. சலித்து எழுந்து வரும்போது நீங்களே உங்கள் காலால் அதை எட்டி உதைத்து அழிப்பீர்கள் அல்லது நீங்கள் கிளம்பியபின் கடல் நீரே அதைத் தின்றுவிடும் !
இப்ப உங்க எதிரில் இருப்பது இரண்டே சாய்ஸ்தான்.
ஒன்று, ஐந்தாண்டுகள் ஆண்ட திமுக கூட்டணிக்கு மீண்டும் வாக்களித்து அவர்களையேத் தொடரச் செய்வது ;
அல்லது சங்கிகளுடன் கூட்டணி வைத்துள்ள, அன்புமணி, பாலு, சி.வி.சண்முகம் போன்ற கடுஞ் சாதிவெறியர்களால் நிரம்பிய அதிமுகவுக்கு வாக்களிப்பது.
ஒரு பேச்சுக்கு இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றால் உங்களிடம் சில கேள்விகள் ;
1.) சாத்தான்குள படுகொலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, கடம்பூர் ராஜூவுக்கோ நேரடி தொடர்பில்லை. எனவே அந்த லாக்கப் படுகொலைக்கு அவர்கள்தான் காரணம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், அவர்கள் அந்த பத்து கொலைகாரர்களையும் காப்பாற்றச் சொன்ன பொய் இருக்கிறது அல்லவா ? அது கொடூரமானது.
போலிசார் அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்தபோது, வரமாட்டேன் என தரையில் உருண்டு புரண்டு பிடிவாதம் காட்டியதால் நெஞ்சு தரையில் மோதி, காயப்பட்டு இறந்துவிட்டனர் என்று சட்டசபையில் போலிஸ் எழுதிக் கொடுத்ததை அப்படி அப்படியே வாசித்தார் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி.
சரி. திமுக ஆட்சியிலும் காவலர்களால் அஜீத்குமார் என்கிற இளைஞர் கொல்லப்பட்டார். எங்கேனும் அஜீத்குமாரை இழித்தோ, காவலர்களை உயர்த்தியோ முதலமைச்சரோ, இதர அமைச்சர்களோ பேசிப் பார்த்தீர்களா ?
வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் நரகலைக் கலந்ததாக அந்த ஊர் மக்கள் சந்தேகித்த இருவரும் அதிமுகவினர். ஸ்டாலின் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் அதை பெரிய அரசியலாக்கி அவர்கள் இருவரையும் கைது செய்து திமுகவை அவமானப்படுத்தி இருப்பார். ஆனால், ஸ்டாலின் அப்படி ஓர் இழி அரசியலைச் செய்யவில்லை. DNA ஆதாரங்கள் வரை நோண்டியெடுக்கும் விசாரணையை நீதிமன்றப் பார்வையில் செய்ய ஆணையிட்டார். இன்று அப்படிச் செய்யச் சொன்னவன் அறிவியல்பூர்வமாக அந்த மக்களிடம் அம்பலப்படவிருக்கிறான். இதற்குப் பெயர்தான் ஆட்சி !
2.) ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தபோது இங்கிருந்த சில ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் அது சரியான நடவடிக்கை என்றார்கள். ஏன் ரஜினிகாந்தே அப்படித்தான் பேசினார். அதனால் அவருடைய காலா படம் அட்டர் ப்ளாஃப் ஆனது. மக்கள் அந்தளவு அவர் மீது கோபப்பட்டனர். ஏனெனில் அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னரும் அங்கு 99 நாட்கள் அறப்போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் கூட சிறு சட்ட ஒழுஙகு பிசகவில்லை. அமைதியாக நடந்த புரட்சி அது. அவ்வளவு பெரிய தொழிற்சாலையை மூட வைத்து விட்டார்களே என்கிற கடுஞ்சினத்தில் சங்கிகளும், கார்ப்பரேட் கைக்கூலிகளும், ர ரக்களும் இணைந்து நடத்திய படுகொலை அது !
எங்கேனும் 13 வயதுப் பெண் கலவரத்தில் ஈடுபட்டாள் என எவராலும் நிறுவ இயலுமா ?
ஸ்னோலின் எனும் அந்தச் சிறுமி அந்த படிக்கும் வயதில் தன் எதிர்காலச் சந்ததியினர் ஸ்டெர்லைட் ஆலையால் மாசுபடும் நிலத்தடி நீரால் பாழ்பட்டுவிடக் கூடாதே என்று போராட களத்துக்கு வந்த ஒரே காரணத்துக்காக வாயில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டாள். ஏன் தெரியுமா ? அந்தப் போராட்டத்தில் அந்தச் சிறுமி முதலமைச்சர் எடப்பாடியையும், பிரதமர் மோடியையும் எதிர்த்துப் பேசியிருந்தார் !
இந்தத் துப்பாக்கிச் சூடு எனக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்றும், தானும் உங்களைப் போல டிவியில் பார்த்துதான் இதைத் தெரிந்துக் கொண்டதாகவும் துளி வெட்கமின்றி பேட்டியளித்தார் எடப்பாடியார் !
3.) நீட் கட்டாயச் சட்டமாக்கப்பட்டது 2016 ல் தான். அன்று நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பாக 37 எம்.பிக்களும், பாமக சார்பாக அன்புமணியும் அவையில் இருந்தனர். மாநிலஙகள் அவையில் அன்று 13 எம்.பிக்கள். கிட்டத்தட்ட 51 பேர். அந்த ஒரு ஆள் பொன்னார். அவர் அவருடையக் கட்சிக்குத்தான் வாக்களிப்பார் என்பதால் அவரை விட்டுவிடுங்கள். மிச்ச 51 பேர் நீட்டுக்கு எதிராக வாக்களிச்சிருக்கணும்ல்ல ? அளிக்கவில்லை. கமுக்கமா வெளிநடப்பு செஞ்சுட்டாய்ங்க. அதாவது எதிர்க்கிறாய்ங்களாமாம்.
ஏம்பா எதிர்ப்புன்னா முந்தா நேத்து திமுக அலறவிட்டதே அதுதாம்பா எதிர்ப்பு ? நீ என்ன வாக்களிக்காம வெளியே போயிட்ட ? அவைல யார் மெஜாரிட்டியா இருந்தாய்ங்களோ அவங்க ஆதரவை கணக்கு காட்டி நீட் நுழைஞ்சிருச்சி. அதனால 2017ல நீட் கட்டாயமாகி, அனிதா தற்கொலைல துவங்கி ... ப்ச். எத்தனை பிஞ்சுகள் கருகிப் போச்சு ?
இத்தனைக்கும் ஜெயா இருக்கப்பவே இது நிகழ்ந்தது. அந்தம்மா போனப்புறம் ? இவனுக அடுத்து எல்லாத்துக்கும் குனிஞ்சானுக, எல்லாத்துக்கும் குனிஞ்சானுக.
ஆனா திமுக நிறைஞ்சிருக்க அவையால, அரசியல் சாசனத்தை திருத்தி நாட்டையே நாசமாக்க நினைக்கிற சங்கிகளால எதுவுமே முடியல. கதறிக் கதறி அழறானுக. தொகுதி மறுவரையறையில அவனுக விட்டது கோட்டை அல்ல, கோட்டையை. நாக்பூரான்கள் மோடியையும், அமீத்தையும் கடிச்சி வச்சிட்டாய்ங்களாமாம். நீங்கல்லாம் impotentகள்டா என்று குருமூர்த்தி வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்திருக்கிறார் !
இவர்களுக்குப் போய் நீங்கள் வாக்களித்தால் நாட்டுக்கு கேடுதானே விளையும் ?
4.) அன்புமணியுடன் இருக்கும் வழக்கறிஞர் பாலு & அதிமுகவின் சி.வி.சண்முகம் இருவரும் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் ஆலயத்தில் பட்டியலின இந்துக்கள் நுழைந்துவிட்டனர் என்று ஆவேசமாக அங்கு போய் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
என்னாச்சுன்னு கேளுங்க.
இந்த பீஜேபீகாரன் இந்து சந்து பொந்துன்னு சீன் போடுவானே அன்றி ஒரே மதத்தில் வன்னியர் கொஞ்சம் மேல தலித்கள் கொஞ்சம் கீழ என்றிருப்பதை தடுக்க மாட்டான். யார் வெயிட்டோ அவங்களுக்கு விளக்கு பிடிப்பான். திரவுபதி அம்மன் ஆலயத்துக்குள்ள பட்டியலின மக்கள் வழிபட நுழைஞ்சிட்டாங்கன்னு அந்த ஆலயத்தை இழுத்து பூட்டிக் கொண்டார்கள். அரசு சார்பா அங்கு போன அதிகாரிகள், இது தப்பு, அப்படி மனிதரில் பாகுபாடு பார்க்கக்கூடாது, பொதுக்கோயில்ன்னா யாரும் தொழ அவர்களுக்கு உரிமை உண்டு, உன் சாதிக்குன்னு ஒரு கோயிலை நீ பொதுவெளியில் கட்ட முடியாதுன்னு சொல்லுது.
அவனுக கேக்கல. யாருமே போக முடியாதுன்னு அரசு சீல் வச்சிருச்சு.
உடனே குதிச்சிக்கிட்டு அதெப்படி எங்காளுகளுமா போவக் கூடாதுன்னு பாலுவும், சி.வி.சண்முகமும் சாலை மறியல் பண்ண வந்துட்டாய்ங்க.
அதே இடத்துக்கு அவங்க சாதி ஆளான பொன்முடியும் போனாரு. ஆனா அங்க போய் உங்களுக்கு நான் சப்போர்ட்ன்னா இவன்களைப் போலச் சொன்னாரு ? இப்படி நீங்கச் செய்யறது தப்புன்னு சொன்னாரு. அதுதான் திமுக.
இதே பாலுவும், சம்முவமும் இப்ப எலக்சன்ல நிக்காய்ங்க. எங்கே எனக்கு பட்டியல் இனமக்கள் ஒருத்தனும் வாக்களிக்கத் தேவையில்லைன்னு சொல்ல சொல்லுங்க, பாக்கலாம் ? வெக்கங்கெட்டவங்க கூசாம அவிங்ககிட்டயே போய் வாக்கு கேப்பாய்ங்க !
இவன்க கூடச் சேர்ந்து கூத்தடிக்கிற அதிமுகவுக்கா வாக்களிக்க நினைச்சீங்க ?
5.) திருப்பரக்குன்றம்தான் முருகனோட அறுபடைவீட்டுல மொத வீடு. வருஷா வருஷம் போயிருவேன். மீனாட்சி, முருகன், அழகர், அப்படியே மேல பழமுதிர்ச்சோலை, ராக்காயி, கோனார் கடைல கறிதோசை, மிஸ்சே ஆகாது !
கலவரத்துக்குன்னே பிறந்த சங்கிகளாலத்தான் அங்கும் ஒரு தர்கா இருப்பதே தெரிஞ்சது. இந்த வருஷம் போனா தர்காவுக்கும் ஒரு விசிட்ட போட்டுட வேண்டியதுதான்.
மவுண்ட்ரோடு, ஸ்டேன்லி, ஏர்வாடி, நாகூர் தர்காவுக்கெல்லாம் முஸ்லீம்களை விட அதிகமா வர்றது இந்துக்கள்தான்னு சங்கி ஞமலிகள் எவனுக்குமே தெரியாது. இனி திருப்பரக்குன்ற சிக்கந்தர் தர்காவும் இந்துக்களால் நிரம்பி வழியப்போகுது. இவன்களுக்கான எதிர்வினைய இப்படித்தான் நாங்க கொடுத்து வழக்கம்.
கார்த்திகை தீபம் அதுக்குன்னு ஏத்துற இடத்துல நூற்றாண்டு காலமா ஏத்தப்பட்டுக்கிட்டேத்தான் இருக்கு. இந்தப் புழு🔥களுக்கு தர்காகிட்ட இருக்கிற மைல் தூண்லதான் ஏத்தணுமாம். நீதிமன்றத்துல வேலை செய்யுற ஒரு சங்கியை நம்பி கேஸ் போட்டுச் சாதகமா தீர்ப்பும் வாங்கிட்டானுக.
நீங்களே சொல்லுங்க. ஓர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எந்த ஓர் அரசாவது மீற முடியுமா ?
2006 ல சமச்சீர் கல்விமுறைன்னு கலைஞர் கொண்டு வர்றார்.
ஆங் அதெல்லாம் முடிஞ்சி போச்சு. திரும்ப பழைய குருடி நீ வந்து கதவைத் திறடின்னு 2011 ல ஜெயலலிதா பழையபடி ஸ்டேட் போர்டு தனி, மெட்ரிக் தனி, ஆங்க்லோ இந்தியன் தனின்னு ரூல்ஸ் போட்டாங்க. கோர்ட் செல்லாது செல்லாது, உன் இஷ்டமயிருக்கெல்லாம் நீ ஆட முடியாது, சமச்சீர்கல்விதான் செல்லும்ன்னு தீர்ப்பு கொடுத்தது. அந்தம்மா ஒரு கையை வாய்லயும், இன்னொரு கையை பின்னாலயும் பவ்யமா வச்சிக்கிட்டு இன்னிவரை அதே சிஸ்டம் ஓடுது.
ஆனா ஸ்டாலின் என்ன பண்ணாரு தெரியுமா ?
நீ தீர்ப்பு கொடுத்தாலும், நீயே வந்து விளக்கு புடிச்சாலும் உன் இஷ்டப்பட்ட இடத்துலல்லாம் தீபமேத்த முடியாதுன்னு அந்த தர்காவுக்கு அரணாகக் காத்து நின்னார். ஸ்டாலினுக்காக சில அதிகாரிகள்தான் பாவம் ரொம்பவே அந்தச் சங்கியால அவமானப் பட்டாங்க. ஆனாலும் அந்த மாவீரர்களை வரலாறு என்றென்றும் நினைவில் வச்சுக்கும். அவர்களுக்கு நல்லதும் நடக்கும்.
இப்பேற்பட்ட ஒரு வீரரை நாம இழக்கலாமா ? மத நல்லிணக்கத்துக்காக எப்படி துணிஞ்சி கெத்து காட்டியிருக்கார் ? இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நமக்குள்ள சண்டைய மூட்டி விடுற அந்தச் சங்கி நரிகளை பத்திவிடணுமா - வேணாமா ? அப்படி விரட்டி அடிக்கணும்ன்னா யாருனா அதிமுகவுக்கு வாக்களிக்க நினைப்பாங்களா ?
ஆதரிப்பீர் உதயசூரியன்.
நிறைய தொகுதிகளில் நம்ம சின்னம்தான் மெஷின்ல முதலில் இருக்கும். ஒரு சில இடங்களில் ரெண்டாவதா, மூணாவதா இருக்கலாம், ஆனா ரொம்ப தேடத் தேவையில்லை. ஏன்னா நாம 75 வருடக் கட்சி. நம்ம சின்னமே 70 வருடங்களா இங்க பிரபலம்.
என்னோட ராயபுரத்தில் உதயசூரியன் முதல் இடத்தில் இருக்கு. வாக்கு வாங்குவதிலும் அதுதான் இருக்கப் போகுது.
ஆனால் வெறும் கணிப்புகளை நம்பி, முயலைப் போல அசால்ட்டால்லாம் நாங்க இருப்பதில்லை. 23 காலைல எட்டுக்கே எங்கள் வாக்கை உதயசூரியனில் போட்டுட்டு வந்துருவோம்.
நீங்களும் எந்தக் குழப்பமுமில்லாம தெளிவா அதுக்கே போடுங்க போங்க. போட்டுட்டு வாங்க, ஒன்றாக வெற்றியைக் கொண்டாடுவோம் !!! #தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க #தெரிந்துகொள்வோம் #
https://www.facebook.com/share/1GTfVhxtgA/

Raja Rajendran Tamilnadu
கட்சிக்காரர்களாக அன்றி யாருக்கும் வாக்களிக்கும் தன்மை கொண்ட, நடுநிலையாளரா நீங்கள் ?
யாருக்கு வாக்களிக்கலாம் என முடிவு செய்துவிட்டீர்களா ?...

