#🙏🏼ஓம் நமசிவாய *முருகா என்றால் வரும் நன்மைகள்*
ஞானத்தலைவனாகிய *முருகப்பெருமானையும்* அவரது முதன்மை சீடர் மகான் *அகத்தியர்* மற்றும் மகான் *நந்தீசர்,* மகான் *திருமூலதேவர்,* மகான் *கருவூர்தேவர்* போன்ற ஞானிகளை வணங்கி அதன் மூலம் நான் பெற்ற இறை இன்பத்தை மக்களும் அறிந்து அடைய வேண்டுமென்ற எண்ணத்தில் வெளியிடப்படுகிறது.
1. *முருகா* என்றால் கல்வியில் தேர்ச்சி பெறலாம், நல்ல வேலை வாய்ப்பு அமையும்.
2. *முருகா* என்றால் தடைபட்ட திருமணம் நல்லபடி நடக்கும்.
3. *முருகா* என்றால் விவசாயம் நல்லபடி நடக்கும், தொழில் நல்லபடி நடக்கும். வியாபாரமும் நல்லபடி நடக்கும்.
4. *முருகா* என்றால் மதுப்பழக்கம், சூதாடும் பழக்கம், புலால் உண்ணும் பழக்கம் நம்மை விட்டு நீங்கும்.
5. *முருகா* என்றால் நாம் கொண்ட நட்பு தீய நட்பா, நல்ல நட்பா என்று உணர்த்தப்படும்.
6. *முருகா* என்றால் விஷ ஜந்துக்களாலும், துஷ்ட ஜந்துக்களாலும் இடையூறு வராது.
7. *முருகா* என்றால் கள்வர்கள் நம் வீட்டிற்கு வரமாட்டார்கள்.
8. *முருகா* என்றால் செல்வநிலை பெருகும், கடன்சுமை தீரும்.
9. *முருகா* என்றால் வருவாய்க்கு உட்பட்டு செலவு செய்யக்கூடிய பக்குவம் வரும்.
10. *முருகா* என்றால் சக்திக்குட்பட்டு கடன் வாங்காமல் வீடு கட்ட வேண்டும் என்ற உணர்வு வரும்.
11. *முருகா* என்றால் குலதெய்வத்தின் பெயரால் உயிர்பலி கொடுப்பது கொடும் பாவச்செயல் என்று எண்ணுகின்ற எண்ணம் வரும்.
12. *முருகா* என்றால் நம்மை பெற்ற தாய் தந்தைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
13. *முருகா* என்றால் நம்மை நம்பி வந்த மனைவியை சந்தேகப்படுவதும் அவளை சித்ரவதை செய்வதும் பாவமென்ற உணர்வு வரும்.
14. *முருகா* என்றால் பிறர் வளர்ச்சியை கண்டு பொறாமை படாமல் இருத்தலும், அவருக்கு இடையூறு செய்யாமல் இருக்கவும் அறிவு வரும்.
15. *முருகா* என்றால் பிறரை வஞ்சித்து சேர்த்த பொருள், அவனது குடும்பத்தையும், சந்ததியையும் பாதிக்கும் என்ற உணர்வு வரும்.
16. *முருகா* என்றால் நாம் உண்பதற்கு பல்வேறு தானியங்களும், பருப்புகளும், காய்கறிகளும், கிழங்குகளும் இருக்கிறது. அதை விட்டுவிட்டு மிருக உணவை (அசைவம்) உட்கொள்வது பாவம் என்று உணர்த்தப்படும்.
17. *முருகா* என்றால் இல்லறத்திற்கும் ஞானத்திற்கும் தலைவன் *முருகன்தான்* என்று உணர்த்தப்படும். மேலும் ஞானத்திற்குரிய அறிவு வரும்.
18. *முருகா* என்றால் பல்வேறு சாஸ்திரங்களையும், ஆகமங்களையும் கற்றாலும் *குருஅருள்* இல்லையேல் இறையருள் பெற முடியாது என்று உணர்த்தப்படும்.
19. *முருகா* என்றால் நமது வாழ்வு நிலையில்லாதது என்றும், செல்வம் உள்ள போதே பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வரும்.
20. *முருகா* என்றால் தம்மிடம் உள்ள பொருள் காணவில்லையென்றால் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்காமல், திடீரென பிறர்மேல் குற்றம் சுமத்துவது பாவமென்று உணர்த்தப்படும்.
21. *முருகா* என்று சொல்பவர்களுக்கு வறுமை வராது. அப்படியே வினைக்காரணமாக வறுமை வந்தாலும், பிறர் பொருளை களவாடக்கூடாது என்ற வைராக்கிய உணர்வு வரும்.
22. *முருகா* என்றால் நம்மை நோக்கி வருகின்ற விருந்தை, உபசரித்து நட்பை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வரும்.
23. *முருகா* என்றால் உண்மையான குரு யார் என்பதும், போலி சாமியார்களை பற்றி அறியும் அறிவு வரும்.
24. *முருகா* என்றால் பேய், பூத கணங்களும், தேவர்களும் கைகட்டி சேவை செய்வார்கள். மேலும் பல அற்புதங்கள் செய்யலாம்.
25. *முருகா* என்றால் பில்லி, சூன்யம், ஏவல் நம்மை அணுகாது.
26. *முருகா* என்றால் பிறஉயிர்களை துன்புறுத்தி மகிழும் வன்மனம் நீங்கும்.
- அந்தமில்லாஞானி *அரங்கமகாதேசிகர்*


